"வாங்கண்ணா வணக்கங்கண்ணா".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு!
புதுவை: நீண்ட நாட்களுக்குப் பிறகு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் முதல்வர் நாராயணசாமியும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டு வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
புதுவையில் துணை நிலை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களையும் முன் வைத்து கொண்டனர்.
இந்த மோதல் போக்கு அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்து வந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் இருவரும் நேருக்கு நேர் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட போது ஒருவருக்கொருவர் வணக்கம் கூறிக் கொண்டனர்.

கார்கில்
கடந்த 1999-ஆம் ஆண்டு கார்கில் போரில் இந்தியா வென்றது. இந்த வெற்றிக்காக மரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுக்கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

புதுவை முதல்வர்
அந்த வகையில் கார்கில் போரின் 21-ஆம் ஆண்டு வெற்றி தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புதுவையில் கடற்கரையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் புதுவை முதல்வர் நாராயணசாமியும் கலந்து கொண்டனர்.

பாராட்டு
அப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதால் இருவரும் மரியாதை நிமித்தமாக வணக்கங்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது கிரண்பேடி, சட்டசபை உறுப்பினர்களுக்கு எப்போது கொரோனா சோதனை செய்யவுள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய அவர் பெரும் சவால்களுக்கு மத்தியில் பட்ஜெட்டை நிறைவேற்றியதற்கு முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

ஆச்சரியம்
அதற்கு முதல்வர் நாராயணசாமி , நாளை அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறிவிட்டு அவரது வாழ்த்துகளுக்கு நன்றியையும் தெரிவித்தார். அது போல் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடமும் கிரண்பேடி பேசி, மரத்தடியில் சட்டப்பேரவை நிகழ்வு புகைப்படத்தை பார்த்தேன், அது வரவேற்கத்தக்கது. அந்த படத்தை பத்திரமாக வைத்திருங்கள் என்றார். இந்த சம்பவங்கள் அங்கிருந்த பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications