செம டென்ஷனில் கிரண்பேடி.. செல்போன் காணாமல் போனதால் பரபரப்பு.. நொறுங்கிய நிலையில் மீட்பு!
கிரண்பேடியின் காணாமல் போன செல்போன் கண்டெடுக்கப்பட்டது
புதுவை: செல்போனை தொலைத்துவிட்டு.. கிரண்பேடி ஆன டென்ஷனை பார்த்து.. உடன் இருந்தவர்களும் பதட்டம் ஆகிவிட்டனர். இதனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டு விட்டது!
வார கடைசி நாட்கள் கிரண்பேடி படு சுறுசுறுப்பாகி விடுவார். கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை ஆராய்ந்து.. தூய்மை பணிகளை செய்வார்.
புதுச்சேரியின் ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்தே கிரண்பேடி இப்படி செய்து வருகிறார். வார இறுதி நாட்களில் அதிகாரிகளுடன் கண்டிப்பும், கிராம மக்களிடம் நெருக்கத்தையும் காட்டி வருகிறார் கிரண்பேடி.

கிரண்பேடி
இன்றும்கூட, அப்படித்தான் பாகூர் ஏரிக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த ஏரிக் கரையோரத்தில் சுமார் 3,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்ட ஆளுநர் கிரண் பேடி, 2 வாரத்திற்கு முன்புதான் அதனை துவக்கி வைத்திருந்தார். அதனால், அந்த ஏரிக்கரையின் ஒரு பகுதியில் இன்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

முழக்கம்
அந்த விழாவுக்கு காரில் போக முடியாது என்பதால், மாட்டு வண்டியில் கிளம்பினார். மொத்தம் 3 மாட்டு வண்டிகள்.. அதில் ஒரு மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டார் கிரண்பேடி. பசுமை புதுச்சேரி என்று முழக்கமிட்டுக் கொண்டே மாட்டு வண்டியில் உற்சாகத்துடன் வந்தார்.

உதவியாளர்
ஏரிப்பகுதி என்பதால், வழியில் சேறு நிறைந்த பகுதி வந்தது. இதனால் விழா முடியும்வரை செல்போனை உதவியாளரிடம் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்போனை கேட்டார். ஆனால் அந்த செல்போனை காணவில்லை.

அறிவிப்பு
இதனால் கிரண்பேடி பதற்றம் அடைந்தார். நிறைய தகவல்கள், ஆவணங்கள் அந்த செல்போனில் கிரண்பேடி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. செல்போனை காணாமல் மாட்டு வண்டியில் இருந்து கீழே இறங்கி தேட ஆரம்பித்தார். "யாராவது செல்போனை எடுத்திருந்தாலோ, பார்த்தாலோ தந்துவிடவும்" என்று விழா மேடையில் இருந்த மைக்கிலும் அறிவிக்கப்பட்டது.

நொறுங்கியது
கிரண்பேடி டென்ஷன் ஆனதை பார்த்ததும், அங்கிருந்தோர் எல்லோருமே ஏரிப்பகுதியில் செல்போனை தேடினார்கள். கடைசியில், அங்கிருந்த வயல் பகுதியில் செல்போன் விழுந்து கிடந்தது. ஆனால் சுக்குநூறாக நொறுங்கி போய்விட்டது. உதவியாளர் தன்னிடம் செல்போன் கொடுத்தபோது, அதை மாட்டு வண்டியில் வைத்துள்ளார். அது வழியில் தெரியாமல் விழுந்துவிடவும், அதன்மீது மாட்டு வண்டி ஏறி... இப்படி உடைந்து விட்டதாக தெரிகிறது. கிரண்பேடி டென்ஷன் ஆனதை பார்த்ததும், அங்கிருந்தோர் எல்லோருமே ஏரிப்பகுதியில் செல்போனை தேடினார்கள். கடைசியில், அங்கிருந்த வயல் பகுதியில் செல்போன் விழுந்து கிடந்தது. ஆனால் சுக்குநூறாக நொறுங்கி போய்வீட்டது. உதவியாளர் தன்னிடம் செல்போன் கொடுத்தபோது, அதை மாட்டு வண்டியில் வைத்துள்ளார். அது வழியில் தெரியாமல் விழுந்துவிடவும், அதன்மீது மாட்டு வண்டி ஏறி... இப்படி உடைந்து விட்டதாக தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications