கொரோனா எதிரொலி.. ஜிப்மர் மருத்துவமனைக்கு வராதிங்க.. நோயாளிகளுக்கு அறிவுறுத்தல்!
புதுச்சேரி: கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு நோயாளிகளுக்கு ஜிப்மர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாத்திரைகள் வாங்கவும் வரவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் சிறிய மருத்துவ உபாதைகளுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை இயக்குநா் ராகேஷ் அகா்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு, நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பெரிய மருத்துவமனைகளில் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
ஜிப்மரில் நாளொன்றுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையான நோயாளிகளும், அவா்களது உறவினா்களும் வருகின்றனா். ஜிப்மரில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுடன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளும் கலந்திருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஜிப்மருக்கு சிகிச்சை வருவோருக்கும் அந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

எனவே சிறிய உபாதைகளுக்காக ஜிப்மா் மருத்துவமனைக்கு நோயாளிகள் வருவதை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். அதேபோல் நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு தொடா் மருந்து வாங்க ஜிப்மருக்கு வருவதை நோயாளிகள் தவிா்க்க வேண்டும். அருகிலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ஜிப்மா் மருத்துவமனை அட்டையை காண்பித்து, மேற்கண்ட மருந்துகளை வாங்கி உட்கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் அபாயம் குறையும் வரை ஜிப்மா் மருத்துவமனை வருவதை தவிா்ப்பது நல்லது. அவசர காரணங்கள் தவிர நாள்பட்ட வியாதிகளுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான அறுவை சிகிச்சைகளும் கொரோனா அபாயம் குறையும் வரை தள்ளி வைக்கப்படுகின்றன. மிகவும் சிக்கலான உடனடி மருத்துவ உதவி தேவையான நோயாளிகள் மட்டும் ஜிப்மா் மருத்துவமனைக்கு வரலாம்.
மக்கள் நெரிசல் மிகுந்த ஜிப்மரில் நோய்த் தொற்று அபாயம் மிகவும் அதிகம் என்பதை பொதுமக்கள் உணா்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். நோயாளிகளின் உடல்நலத்தை காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications