தீபாவளி பரிசு காத்திருக்கு.. போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரியில் அறக்கட்டளையில் உறுப்பினராக இணைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குவோம் எனக் கூறி மக்களிடம் செல்போன் எண் வாங்கி பாஜகவில் இணைத்துள்ளனர். செல்போன் எண் தந்தவர்களுக்கு பாஜகவில் இணைந்ததாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் புதுப்பிப்பு பணிகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. பாஜகவினர், ஆங்காங்கே முகாம்களை நடத்தி பாஜகவில் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் மக்களை ஏமாற்றி போன் நம்பரை வாங்கி அவர்களை பாஜகவில் உறுப்பினராகச் சேர்த்து விட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் அறக்கட்டளையில் இணைப்பதாக கூறி மக்களிடம் செல்போன் எண் வாங்கி உள்ளனர். தீபாவளிக்கு பரிசு வழங்கப்படும் என்று கூறி அதற்கு அறக்கட்டளையில் உறுப்பினராக வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதனை நம்பி பலரும் தங்கள் போன் நம்பர், ஆதார் அட்டை எண் ஆகியவற்றை கொடுத்த நிலையில், செல்போன் எண் தந்தவர்களுக்கு பாஜகவில் இணைந்ததாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகவில் இணைந்ததாக எஸ்எம்எஸ் வந்தாலும், எங்களுக்கு விருப்பமான கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சிலர் வந்து, அறக்கட்டளையில் உறுப்பினராக சேர்க்கிறோம், நலத்திட்ட உதவிகளை வழங்குவோம் எனக் கூறி போன் நம்பர் கேட்டனர். அதை நம்பி போன் நம்பரை கொடுத்த நிலையில் பாஜகவில் சேர்ந்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. பொய் சொல்லி நம்பர் வாங்கி இப்படி நம்பிக்கை துரோகம் செய்துள்ளனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அந்தப் பகுதியில் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள ஒவ்வொருவரின் போன் நம்பர், ஆதார் எண்ணையும் வாங்கிச் சென்று இவ்வாறு பாஜகவில் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications