ஏடிஎம் லாக்கரை பூட்டாமல் வந்த அதிகாரிகள்.. ரூ. 4 லட்சத்தை 'அபேஸ்' செய்த இளம் பெண்.. அதிரடி கைது
புதுச்சேரியில் ஏடிஎம் மையத்தில், ரூ. 3.90 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்ததாக 28 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஏடிஎம் மையத்தில், ரூ. 3.90 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்ததாக 28 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.
புதுச்சேரியில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது. இதை போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
சி.சி. டிவி காமிரா காட்சி மூலம் கொள்ளையடித்த நபரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

எப்படி?
ஏடிஎம் எந்திரம் உடைக்கப்படாமல் அழகாக திறக்கப்பட்டு திருடப்பட்டது போலீஸ் அதிகாரிகளுக்கு பெரிய ஆச்சர்யத்தை அளித்தது. இதனால் வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

பெண் ஒருவர்தான்
சிசிடிவி கேமராவின் உதவியுடன் பெண் ஒருவர்தான் பணத்தை கொள்ளையடித்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் பணத்தை 28 வயது இளம் பெண் சித்ரா என்பவர் கொள்ளையடித்தது தெரியவந்தது.

பணம் நிரப்பினார்கள்
இந்த நிலையில் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து போலீசார் அவரை கைது செய்தனர். வங்கி ஊழியர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் பணம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.ஏ.டி. எம் மையத்தில் பணம் நிரப்பி வைக்கும் பெட்டியில் திருடுபோவதற்கு சில நிமிடத்திற்கு முன்தான் பணம் நிரப்பி இருக்கிறார்கள்.

அட
ஆனால் அந்த பெட்டியை வங்கி ஊழியர்கள் சரியாக பூட்டாமல் அஜாக்கிரதையாக சென்றுள்ளனர்.இதுதான் இந்த கொள்ளைக்கு காரணம் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிசிடிவி காமிரா காட்சி மூலம் கொள்ளை நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே இளம் பெண் பிடிபட்ட சம்பவம் புதுச்சேரியில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications