லாக்டவுன் நேரத்தில் இரு ஹீரோக்கள்.. கர்ப்பிணிக்கு ஆட்டோ கொடுத்த ஓனர்.. டிரைவராக மாறிய போலீஸ்காரர்!
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்காக ஒரு போலீஸ்காரர் ஆட்டோ டிரைவராக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. போலீஸாரும் பிற துறையினரும் மக்களுக்காக பல்வேறு வகையில் சேவையாற்றி வருகின்றனர். போலீஸார் வெளியில் வருவோரை அடிக்கிறார்கள், பிடிக்கிறார்கள் என சர்ச்சைகளும் வெடித்தபடி உள்ளன.
ஆனாலும் கொரோனாவைரஸ் பரவலைத் தடுக்க போலீஸார் வேறு வழியே இல்லாமல் சில நேரம் இப்படி நடந்து விட நேரிடுகிறது. அதேசமயம், அவர்களுக்குள்ளும் மனிதாபிமானம், மனித நேயம் இருப்பதை பல சம்பவங்கள் வெளிக்காட்டியபடி உள்ளன.

மக்கள்
பல ஊர்களில் போலீஸார் மக்களுக்கு உதவும் செயல்கள் குறித்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஏதோ ஒரு ஊரில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல ஆள் இல்லாமல் போலீஸாரே சேர்ந்து தூக்கிக் கொண்டு போய் இடுகாட்டில் சேர்த்த படமும் செய்தியும் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்தது. இப்போது அப்படிப்பட்ட இன்னொரு உணர்வுச் சம்பவம் புதுச்சேரியில் நடந்துள்ளது.

காவலர்
புதுச்சேரியில் ஆயுதப் படை காவலராக உள்ளவர் கருணாகரன். இவர் தமிழக எல்லையில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் பணியில் இருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏப்ரல் 13-ஆம் தேதி பிரசவ வலியால் துடித்தார். அப்போது அவரை அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனத்தை தேடினார். லாக்டவுனால் ஆட்டோக்கள் ஏதும் இல்லை.

வண்டி ஓட்டத் தெரியாது
ஒரு ஆட்டோ உரிமையாளர் தனது ஆட்டோவை கொடுத்தார். ஆனால் அவருக்கு வண்டி ஓட்டத் தெரியாது. இதையடுத்து கருணாகரன் அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அந்த இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள மருத்துவமனைக்கு அந்த பெண்ணை பெற்றோரிடம் அழைத்து சென்றார். அங்கு அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

போலீஸ்
இந்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் என்றால் ஒரு பார்வையும், போலீஸார் என்றால் ஒரு பார்வையும் இருந்த நிலையில் இந்த இருவரும் அதை துடைத்துப் போட்டுள்ளனர். நாங்கள் இருப்பது மக்களுக்காக என்பதைக் காட்டியுள்ளனர். ஒரே சமயத்தில் இரு தரப்பினரும் மக்கள் மத்தியில் ஹீரோக்களாக மாறியுள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications