Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுச்சேரி அரசு பஸ்ஸில் யாரது? நோட்டு புத்தகத்தில் ஆபாசம்.. 1ம் வகுப்பு மாணவியையும் விடல.. கொடுமை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பத்தில் 1ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை பொதுமக்கள் ஆத்திரமடைந்து விரட்டி விரட்டி தாக்கினார்கள்.. அத்துடன் பொதுமக்களின் 7 மணி நேர சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு போக்சோ பிரிவின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே அந்த தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு 1ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால், பெற்றோர் தங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அப்போது மருத்துவர்கள் சொன்னதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Puducherry Science Teacher Government Bus

விரட்டி விரட்டி தாக்குதல்:

பள்ளியில் அறிவியல் ஆசிரியர் மணிகண்டன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.. இதையடுத்து, பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, பள்ளி நிர்வாகம் இதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையாம்.. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், உறவினர்கள், குழந்தைகள் நல குழுவுக்கும், தவளக்குப்பம் போலீசுக்கும் தகவல் தந்துவிட்டு, நேற்று முன்தினம் தனியார் பள்ளியை முற்றுகையிட திரண்டனர். அங்கிருந்த ஆசிரியர் மணிகண்டனையும் விரட்டி விரட்டி தாக்கியிருக்கிறார்கள்.

பிறகு, தகவலறிந்து வந்த போலீசார், ஆசிரியரை மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள். எனினும் கோபம் அடங்காத உறவினர்கள், பள்ளியில் இருந்த கண்ணாடி, மேஜை, கணினி அறை, நாற்காலி என அனைத்தையும் நொறுக்கி சூறையாடினர். பிறகு, புதுச்சேரி- கடலூர் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.

7 மணி நேரம் நடந்த மறியல்

இதுகுறித்து தகவலறிந்த சபாநாயகர் செல்வம், நேரடியாகவே போலீஸ் உயரதிகாரிகளுடன் கிளம்பிவந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியர் மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதிய வேண்டும் என்று பொதுமக்கள் கோஷமிட்டார்கள்.

தொடர்ந்து 7 மணி நேரமாக இந்த மறியல் நடந்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பிறகு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், பள்ளி தாளாளர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளிக்கு சீல் வைக்கப்படும் என உறுதி தந்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

18 மீனவ கிராமங்கள்

அதற்குள் சிறுமி சம்பவத்தை கண்டித்து 18 மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், நேற்று நடக்கவிருந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வும் ரத்து செய்யப்பட்டது. பள்ளி நுழைவாயில் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்ததால், 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வீட்டுக்கே திரும்பி சென்றுவிட்டார்கள். இவர்களுக்கு வேறு தேதியில் செய்முறை தேர்வு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மணிகண்டனை அடையாளம் காட்டுவதற்காக, சிறுமியுடன் பெற்றோர், போலீசார், சைல்டு லைன் நிர்வாகிகள் பள்ளிக்கு சென்றிருக்கிறார்கள். இந்த விஷயம் தெரிந்துகொண்ட மணிகண்டன், யாரிடமும் சிக்காமல் மறைந்து கொண்டாராம்.. இதனால், மணிகண்டன் தவிர மற்ற ஆசிரியர்களை பார்த்துவிட்டு, யாரையுமே சிறுமி அடையாளம் காட்டவில்லை.

பஸ்ஸில் மறைந்த மணிகண்டன்

பிறகு, ஆசிரியர் மணிகண்டன் பஸ்ஸில் மறைந்து கொண்டிருந்தாராம்.. இதை பார்த்த சிறுமி, உடனே போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.. அதற்கு பிறகே மணிகண்டனை போலீசார் நள்ளிரவில் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

இந்த அறிவியல் ஆசிரியர் மணிகண்டனுக்கு 25 வயதாகிறது.. தவளக்குப்பம் போலீசார் முதலியார் பேட்டையை சேர்ந்தவராம்.. பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவிகளின் நோட்டு புத்தகங்களில், ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்திருக்கிறாராம்.. அதில் உடல் நலம் விசாரிப்பதுபோல் மாத்திரை சாப்பிட்டாயா? என்றும் மாதவிடாய் குறித்தும் பாலியல் ரீதியாகவும் வார்த்தைகளை எழுதி வந்திருக்கிறார்.

இதெல்லாம் இப்போதுதான், மற்ற மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. இதன்காரணமாக, அங்கு படிக்கும் மாணவிகளின் பெற்றோர், தங்களது மகள்களின் நோட்டு, புத்தகங்களையும் வாங்கி ஆய்வு செய்து வருகிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+