புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக விடிய விடிய முதல்வர் நாராயணசாமி போராட்டம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து துணை நிலை ஆளுநர் புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் முதல்வர் நாராயணசாமி விடிய விடிய சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாட்டைக் கண்டித்து முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் இரவிலும் சாலையில் படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பானிபூரி, ஆம்லெட், ஆஃப்பாயில் விநியோகம் செய்யப்பட்டது.
Recommended Video

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து துணை நிலை ஆளுநர் புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அண்ணா சதுக்கம் அருகே நேற்று காலை முதல் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இரவு நேரத்திலும் அங்கேயே சாப்பிட்டு முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன், ஜெயமூர்த்தி, ஜான்குமார், மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோர் அங்கேயே தார்பாய் விரித்து உறங்க தொடங்கினர். தொடர்போராட்டம் எனபதால் நிர்வாகிகள் அனைவரும் அங்கேயே தொடர்ந்து போராட்டம் நடத்தவும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் தொண்டர்களை உற்ச்சாகப்படுத்தும் வகையில் போராட்ட களத்தில் பானிபூரி, பூரி மசாலா, ஆம்லெட், ஆஃப்பாயில் உள்ளிட்டவைகளோடு உணவு பரிமாறப்பட்டு வருகின்றது. போராட்டம் இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாய் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
துணைநிலை ஆளுநரின் எதிரான போராட்டம் நடத்தும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் மற்றும் முற்றுகை போராட்டத்தை காக்கும் வகையில் வஜ்ரா வாகனம் மற்றும் நீர் பீச்சி அடிக்கும் வாகனம் ஆகியவைகளை கொண்டு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications