நிர்பயா தாய் வரலாற்றில் முக்கிய இடத்தை அடைந்துள்ளார்.. கிரண்பேடி கருத்து

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தனது மகளின் இறுதி நீதிக்காக போராடிய நிர்பயாவின் தாய் ஆஷாதேவி, தனது மகளுக்காக ஒரு தடுத்து நிறுத்த முடியாத தாயாக வரலாற்றில் முக்கிய இடத்தை அடைந்துள்ளார் என கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

Puducherry Governor Kiran bedi comment on the execution of Nirbhaya case convicts

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Puducherry Governor Kiran bedi comment on the execution of Nirbhaya case convicts

இந்நிலையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளம் மூலம் கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது மகளின் இறுதி நீதிக்காக போராடிய நிர்பயாவின் தாய் ஆஷாதேவி, தனது மகளுக்கு ஒரு தடுத்து நிறுத்த முடியாத தாயாக வரலாற்றில் முக்கிய இடத்தை அடைந்துள்ளார்.

மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற குற்றவாளிகளின் முரண்பாட்டை அவரது போராட்டம் முழுமையாக அம்பலப்படுத்தியது என கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+