ஆபரேசன் தாமரை! நேற்று பீகார்.. அடுத்து புதுச்சேரி - பகீர் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்
புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் நிலையே ஏற்படும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்து உள்ளார்.
Recommended Video
புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனின் உரையுடன் தொடங்கியது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு காவல்துறை தரப்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது உரையாற்றிய தமிழிசை, "புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட தனிநபர் வருமான அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ.10,416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.9,709 கோடி என 94 செலவிடப்பட்டு உள்ளது.

காங்கிரஸ், திமுக எதிர்ப்பு
அப்போது தமிழிசை சவுந்திரராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தமிழிசை தனது உரையை தொடங்கியவுடன், காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று, "தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியடைந்தோம். கூடுதல் நிதி கிடைக்கும், அரசு நிறுவனங்கள் திறக்கப்படும் என எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.

வெளிநடப்பு
பிரதமர் மோடியை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து கூடுதல் நிதி மற்றும் மாநில அந்தஸ்டு கேட்டு உள்ளார். அதன் பின்னர் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கிடைக்கவில்லை என்று கூறி அவர்கள் திமுக எம்.எல்.ஏக்களுடன் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களை சந்தித்தார்.

ரங்கசாமிக்கு நிதீஷ் நிலை
அப்போது பேசிய அவர் "புதுச்சேரிக்கு தேவையான நிதியை வாங்கித்தராமல், வளர்ச்சிக்கு எதிராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அரசியல் செய்து வருகிறார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். பீகார் முதலமைச்சராக இருந்த நிதீஷ்குமாரின் நிலை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பாஜகவால் ஏற்படும். நிதீஷ் குமாரைபோல் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்."

நாராணசாமி குற்றச்சாட்டு
கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் ஆள தகுதி இல்லாதவர்கள் பதவி விலகிட வேண்டும். புதுச்சேரியின் சூப்பர் முதலமைச்சராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும், முதலமைச்சர்களாக அனைத்து அமைச்சர்களும் உள்ளார்கள். ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் என்.ஆர்.காங்கிரஸ் அரசில் அதிகரித்து உள்ளது." என்றார்.

தமிழிசை விளக்கம்
இதற்கு பதிலளித்த தமிழிசை, "ஆளுநர் வேறு துணை நிலை ஆளுநர் வேறு. துணை நிலை ஆளுநருக்கு சில முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரம் இருக்கிறது. நானும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் இணைந்து பணியாற்றுகிறோம். நாராயணசாமியால் இணைந்து பணியாற்ற முடியவில்லை. நாங்கள் இணைந்து பணியாற்றுவது அவருக்கு வாட்டுகிறது. ஆதனால் இப்படி பேசிகிறார். இருவருக்கு இடையே ஈகோவை உருவாக்க நினைக்கிறார். அது முடியாது. மக்களுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம்." என்றார்.
-
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications