தொகுதி மக்களுக்கு 5 கிலோ அரிசி.. வீடு வீடாக சென்று வழங்கிய புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளை முதல்வர் நாராணசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு தனது சொந்த செலவில் 5 கிலோ அரிசியையும் முதல்வர் வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று முதல்வர் நாராயணசாமி புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் காய்கறி விலைகளை கேட்டறிந்த அவர் தனிமனித இடைவெளிவிட்டு பொருட்களை வாங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் முகக்கவசம் வழங்கினார்.

தொடர்ந்து ரெட்டியார்பாளையம், மூலகுளம், வழுதாவூர் ரோடு ஆகிய பகுதிகள் மற்றும் மார்க்கெட் கமிட்டியில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளையும் ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கினார். இதேபோல் அஜந்தா சிக்னல் மற்றும் முத்தியால்பேட்டை மார்க்கெட் எதிரில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளையும், எல்லைப் பகுதியான கோட்டக்குப்பம் சந்திப்பிலும் மற்றும் நகர பகுதிகளில் உள்ள தற்காலிக காய்கறி கடைகளை பார்வையிட்ட முதல்வர் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து தன்னுடைய நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் முதல்வர் நாராயணசாமி தனது சொந்த செலவில் தலா 5 கிலோ அரிசியை வீடுவீடாக சென்று வழங்கினார். தொடர்ந்து தொகுதியில் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு 3 கிலோ பருப்பையும் அவர் வழங்கினார்.

-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications