4 மணி நேர ஆன்லைன் கேம்...புதுச்சேரி மாணவன் பலியான பரிதாபம்
புதுச்சேரி : புதுச்சேரியில் 4 மணி நேரம் ஆன்லைனில் கேம் விளையாடிய மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது இளைய மகன் தர்ஷன் (வயது 16). தனியார் பள்ளி மாணவரான, இவர் வீட்டின் அறையில் அமர்ந்து கொண்டு தனது மொபைல் போனில் பயர்வால் எனும் ஆன்லைன் கேமை தொடர்ந்து நான்கு மணி நேரமாக விளையாடி கொண்டிருந்தார்.

காதில் ஹெட்செட்டை வைத்துக் கொண்டு 4 மணி நேரமாக பயர்வால் ( firewall ) என்ற ஆன்லைன் கேமை விளையாடி வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் தர்ஷன் திடீரென கீழே மயங்கி விழ , பதறிப்போன அவரது குடும்பத்தினரை உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து தர்ஷன் மேல்சிகிச்சைக்காக ஜிம்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் தர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தர்ஷன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications