இருதயதாஸ்க்கு இதயமே இல்லையா.. ஆபத்தான நிலையில் சிறுவன்.. புதுச்சேரி பெற்றோர் அதிர்ச்சி
புதுச்சேரி: முடிவெட்டாத பள்ளி மாணவனை தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அந்த மாணவர் மயங்கி விழுந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த அபினாஷ் என்ற மாணவன் 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அபினாஷை, முடி வெட்டாத காரணத்தினால் அப்பள்ளியில் பணிபுரியும் மோட்சா இருதயதாஸ் என்ற ஆசிரியர் மாணவர் கண்ணத்தில் அரைந்தும், முதுகில் குத்தியும் சராமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாத மாணவன், மூச்சு பிடிப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாணவனின் பெற்றோர், மாணவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவன் அபினாஷிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மயங்கி விழுந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனையில் கூட அனுமக்கவில்லை. ஆசிரியர் தாக்கியதில் மாணவர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications