புதுவையில் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 5 ஆம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகளை முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஜுன் 8 ந்தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்படும், நாளை முதல் கடற்கரை உள்ளிட்ட பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 5 வது முறையாக நீட்டித்துள்ள பொது முடக்கத்தில் மாநில அரசுகளே பல்வேறு விஷயங்களில், தளர்வுகளை வழங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் இருந்து, தளர்வுகள் கொண்டுவர முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, மத்திய அரசு வழிகாட்டுதல் படி வரும் 8 ந்தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தளங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கபடும்.

நாளை முதல் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள் இரவு 9 மணி வரை சமூக இடைவெளியுடன் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். நாளை முதல் அனைத்து கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து பூங்காக்களும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.

மதுக்கடைகளை பொறுத்தவரை இரவு 7 மணி வரை மட்டுமே செயல்படும் என்பதில் மாற்றம் இல்லை. திரையரங்குகள், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கூட்ட அரங்குகள், அமர்ந்து சாப்பிடக்கூடிய மதுபான விடுதிகள் திறக்க விதிக்கப்படிருந்த தடைகள் தொடரும்.

மேலும் பேருந்து போக்குவரத்தை பொருத்தவறை மாநிலத்திற்குள் இயக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழக பேருந்துகள் புதுச்சேரியில் இருந்து இயக்கவோ, அல்லது புதுச்சேரி வழியாக செல்வது குறித்து தமிழக அரசுடன் பேசி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications