ஜனாதிபதி கைகளால் பட்டத்தை வாங்க மாட்டோம்.. புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவால் பரபரப்பு
புதுச்சேரி: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி கைகளால் பட்டம் பெறப்போவதில்லை புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு 322 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்ற உள்ளார்.
இதனிடையே குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். மேலும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்குமாறு மாணவர் சங்கத்தினர் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக இரண்டு மாணவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெறவுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கார்த்திகா மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் அருண்குமார் ஆகிய இருவரும் குடியரசுத் தலைவரின் கைகளால் பட்டங்களை பெறப்போவதில்ல என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவி கார்த்திகா கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் எதிர்க்கிறேன். பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம் நான் என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய முடியும். இந்த மசோதாவை சட்டமாக்கிய குடியரசு தலைவரிடமிருந்து பட்டத்தை பெற விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரிடமிருந்து பட்டங்களை பெறப்போவதில்ல என மாணவர்கள் இருவர் கூறியுள்ளது பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாளை குடியரசு தலைவர் வரும்போது மாணவர்கள் தடையை மீறி ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க பல்கலைக்கழகத்தில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications