100 அடி ஆழம்.. 3 கி.மீ. தூரத்துக்கு ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏந்திய புதுவை நீச்சல் வீரர்கள்
புதுவை: இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக புதுச்சேரியில் மூன்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தேசிய கொடியை கையிலேந்தியவாறு 100 அடி ஆழத்தில் கடலுக்கு அடியில் 3 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டனர்.
நாட்டின் 73 வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த நவீன் குமார், ரஞ்சித் குமார், மணிகண்டன் ஆகிய மூன்று ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஆழ்க்கடல் சென்று தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.

இந்த முயற்சியானது தேசப்பற்றினை அனைவரிடத்திலும் உணர்த்தும் விதமாகவும், சுதந்திரத்திற்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், புதுச்சேரியில் உள்ள வங்கக் கடலில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை தேசியக் கொடியை கையிலேந்தியவாறு நீச்சலடித்து பயணம் மேற்கொண்டனர்.

ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் இந்த சாகச பயணம் அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து நீச்சல் வீரர்கள் கூறுகையில் ஆழ்கடலுக்கு சென்ற சாதனையை விட தேசியக் கொடியை அதுவும் சுதந்திர தினத்தன்று கையில் ஏந்தி ஆழ் கடல் சென்றது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

இமயமலையில் தேசியக் கொடியை பறக்கவிட்டதை அடுத்து நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி இந்த முயற்சியை மேற்கொண்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications