யார் யாருக்கோ வாலாட்டி பதவியை பெற்றவர் திண்டுக்கல் லியோனி! காட்டமாக விமர்சித்த தமிழிசை சவுந்திரராஜன்
புதுவை: யார் யாருக்கோ வாலாட்டி பதவியை பெற்ற லியோனி முதல்வர் ரங்கசாமியை விமர்சிப்பதா என கேட்டு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
புதுவை அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை சார்பில் தேசிய கல்வி கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 3ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், முதல்வர் ரங்கசாமி, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் ஒரு நாள் புத்தகப் பை இல்லாமல் பள்ளிக்கு வரும் திட்டத்தையும் வாட்டர் பெல் முறையையும் அறிமுகப்படுத்தி வைத்தனர். பின்னர் விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார்.
அவர் பேசுகையில் புதுவையில் அமலாகியுள்ள புதிய கல்விக் கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆனால் தமிழ் என பேசிவிட்டு அவர்கள் பிள்ளைகள் மட்டும் மாற்று மொழியையும் ஒரு பாடமாக பித்துக் கொண்டிருக்கும்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி என கூறினார்கள். ஆனால் யாருக்குமே கல்வி சீராகவே கிடைப்பதில்லை. புதுவைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி, புதிய கல்விக் கொள்கையில் தமிழை பறித்துவிட்டார்கள் என கூறுகிறார். சிபிஎஸ்இ பாடத்திட்டம்22 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கூட அவருக்கு தெரியவில்லை.
அவர் ஒரு பாடநூல் கழகத்திற்க தலைவராக இருக்கிறார் என்பதுதான் வேதனையாக இருக்கிறது. அதோடு புதுவை ரங்கசாமியை தலையாட்டி பொம்மை என விமர்சனம் செய்துள்ளார். இதற்கு நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். புதுவையில் ரங்கசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
அவரை தலையாட்டி பொம்மை என கூறுவதா, யார் யாருக்கோ வாலை ஆட்டிவிட்டு பதவி பெற்றவர்தான் இந்த லியோனி. தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையால் புதுவையில் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வருவோர் புதிய கல்விக் கொள்கையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. இவ்வாறு லியோனியை தமிழிசை சவுந்திரராாஜன் காட்டமாக விமர்சித்திருந்தார்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications