45 ஆண்டுகளாக உணவு இல்லை.. தண்ணீரை அருந்தி வாழும் 80 வயது அதிசய முதியவர்!
புதுக்கோட்டை: 45 ஆண்டுகளாக உணவருந்தாமல் முதியவர் வாழ்ந்து வரும் நிலையில் தனது தந்தை ஒரு முறையாவது உணவருந்துவதை பார்க்க வேண்டும் என அவரது மகன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தில் வருபவர் 80 வயதான முதியவர் நல்லு. தெய்வ வழிபாட்டில் அதீத நம்பிக்கை கொண்டவர்.
இவர் வீடு ஒன்றில் காவலாளியாக வேலைப் பார்த்து வந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அழகி 33 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு
நல்லான், பெரியநாச்சி, மீனாட்சி, அடைக்கி , முருகன், அடைக்கலம் என ஆறு பிள்ளைகளும் 8 பேரன் பேத்திகளும் உள்ளனர்.

பொன்னமராவதி
இவர் பொன்னமராவதி அருகே உள்ள அடைக்கலம் காத்தார் கோவிலின் மீது அதிக நம்பிக்கை கொண்டு சிறுவயதிலிருந்தே உணவு உண்பதை தவிர்த்து வந்துள்ளார். நாளடைவில் முற்றிலுமாக உணவு அருந்துவதை நிறுத்தியுள்ளார். திருமண வீடுகளுக்கு மற்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வதும் இல்லை.

33 வயது கடைசி மகன்
33 வயதான இவரது கடைசி மகனான அடைக்கலம். தனது வாழ்நாளில் தனது தந்தை உணவு அருந்துவதை ஒருமுறை கூட பார்த்ததில்லை. இதனால் தனது தந்தைக்கு உடல்நலக் கோளாறு இருக்கும் என்று கருதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளோம்.

பரிசோதித்த மருத்துவர்கள்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு எந்த உடல்நிலை கோளாறும் இல்லை என்று தெரிவித்தனர். அவருக்கு சத்து மாத்திரைகள் மற்றும் குளுக்கோஸ் முதலியவற்றை கொடுத்து அனுப்பி உள்ளனர். என் தந்தை ஒரு முறையாவது உணவு அருந்துவதை நான் காண வேண்டும் என மகன் கண்ணீர் மல்க தெரிவித்தார். மருத்துவமனைக்கு சென்றதிலிருந்து அவ்வபோது நல்லுவின் மருமகள் குளுக்கோஸை கரைத்து கொடுத்தால் அதனை பருகுகிறாரே தவிர உணவு அருந்துவது கிடையாது.

ஆன்மீக வழி
இதுகுறித்து நல்லுவிடம் கேட்டபோது," இது இறைவன் கொடுத்த உத்தரவு என்றும் மீறினால் இறைவன் தன்னை தண்டித்துவிடுவார் என்றும் கூறினார். மூத்த மகன் முருகன் பேசுகையில் தனது தந்தை வழியில் தானும் ஆன்மீக வழியில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். இவ்வாறாக 45 வருடங்களாக உணவே அருந்தாமல் வாழும் அதிசய முதியவரை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications