Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுக்கோட்டை,திருவாரூர்,கரூர் மாவட்டங்களிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..மாணவர்கள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று ஜனவரி 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது... அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் புகழ்பெற்ற கோவில் திருவிழாக்களை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.. இதற்கான அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுத்திருக்கிறார்கள்...!!

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 5 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்ததும், ஜனவரி 26 ம்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. குடியரசு தினம் திங்கள் கிழமை என்பதால், சனி, ஞாயிற்றுக்கிழமை, திங்கள் கிழமையும் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது.

School Holiday Thiruvarur Pudukkottai Karur

இந்நிலையில், 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் உச்சக்கட்ட குஷியில் உள்ளனர்.

3 மாவட்டங்களுக்கு விடுமுறை

புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று ஜனவரி 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது... அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் புகழ்பெற்ற கோவில் திருவிழாக்களை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது..

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், பிப்ரவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்..

திருவாரூர் புதுக்கோட்டை

அதேபோல திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று திருவிழா நடைபெறுகிறது.. இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.. அதுமட்டுமல்லாமல் இந்த கோவில் தமிழகத்தின் முக்கிய வைணவ தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

எனவே இன்றைய தினம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தின விடுமுறையை ஈடுசெய்யும் நோக்கில், பிப்ரவரி 7ம் தேதி வழக்கமான வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதலில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால், மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென் திருப்பதி தான்தோன்றிமலை கோயில்

அதேபோல கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்றைய தினம் நடைபெற உள்ளது. தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் இந்த கோயில், கரூர் - திண்டுக்கல் சாலையில் குஜிலியம்பாறை அருகே சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது... இதை முன்னிட்டு கரூர் வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசு தேர்வுகள் ஏதேனும் நடைபெற்றால், அந்த தேர்வுகளுடன் தொடர்புடைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இந்த உள்ளூர் விடுமுறைகள் பக்தர்களின் வசதிக்காகவும், கோவில் நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்கவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகங்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+