சாப்பாடு இல்லைனு சொன்னது குத்தமா?.. ஃபுல் போதையில் லாரி ஓட்டுநர் செய்த சம்பவம்.. புனேவில் அதிர்ச்சி
மும்பை: மகாராஷ்டிர மாநிலம், புனேயில் லாரி ஓட்டுநர் ஒருவர் ஹோட்டலுக்குச் சென்று சாப்பாடு கேட்ட நிலையில், ஹோட்டல் க்ளோஸ் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி சாப்பாடு மற்றும் தண்ணீர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் மதுப் பிரியர்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் செய்துவிட்டு, நானா இப்படி பண்ணினேன் என்று காலையில் எழுந்ததும் கேட்கும் சம்பவங்கள் பலவற்றை பார்த்திருப்போம். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்ற பழமொழியும் உள்ளது. அந்த வகையில், புனேவில் ஹோட்டல் மூடப்பட்டதாகக் கூறிய ஹோட்டலின் மீது மதுபோதையில் லாரியை விட்டு மீண்டும் மீண்டும் மோதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் இருந்து புனேவை நோக்கி லாரி ஓட்டுநர் சுக்ராம் என்பவர் வந்துள்ளார். புனே நகருக்குள் வந்த அவர் ஹின்கன்காவ் என்ற பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஹோட்டல் கோகுலுக்கு சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது, ஹோட்டலுக்குள் சென்று சாப்பாடும், தண்ணீரும் வேண்டும் என கேட்டுள்ளார் சுக்ராம்.
இதையடுத்து, ஹோட்டலின் உள்ளே இருந்தவர்கள் வந்து ஹோட்டல் மூடப்பட்டுவிட்டதாக சுக்ராமிடம் தெரிவித்துள்ளனர். இதனால், கடும் ஆத்திரமடைந்த ஓட்டுநர் சுக்ராம் விறுவிறுவென்று சென்று லாரியில் ஏறியுள்ளார். பின்னர், லாரியில் அமர்ந்துவிட்டு வேகமாக லாரியை இயக்கிய சுக்ராம் ஹோட்டல் மீது லாரியைக் கொண்டு மோதியதால் அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒருமுறை மோதிவிட்டு நிற்காமல் தொடர்ந்து பலமுறை லாரியை விட்டு மோதி ஹோட்டலை மோசமாக சேதப்படுத்தினார். இந்த மோதல் சம்பவத்தின்போது ஹோட்டல் மட்டுமல்லாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள், இரண்டு இரு சக்கர வாகனகள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன. இதனால், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
லாரி ஓட்டுநரின் இந்த செயலைப் பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை நிறுத்துமாறு பலமுறை அவரிடம் கூறி சப்தமிட்டனர். ஆனால், அதற்கெல்லாம் அசராத சுக்ராம் லாரியை நிறுத்தாமல் தொடர்ந்து மோதிக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை நோக்கி கற்களை வீசத் தொடங்கினர். ஆனாலும், மோதுவதை அவர் நிறுத்தவில்லை. இந்நிலையில், இந்த மோதலின்போது லாரியின் சக்கரம் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து, உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் லாரி ஓட்டுநர் சுக்ராமை கைது செய்தனர். லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும், இதனால் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹோட்டல் மூடப்பட்டதால் சாப்பாடு, தண்ணீர் இல்லை என்று கூறிய ஹோட்டல் மீது லாரியைக் கொண்டு மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications