க்யூட்.. லலித் ஆனார் லலிதா குமாரி.. பெண்ணாக இருந்து ஆணாக மாறி.. பெண்ணை திருமணம் செய்த போலீஸ்!
ஆணாக மாறி திருமணம் செய்துள்ளார் பெண் போலீஸ்
புனே: பெண்ணாக இருந்து ஆணாக மாறிய போலீஸ்காரர் ஒரு பெண்ணை கல்யாணமே செய்துள்ளார். இவருக்குதான் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லலிதா குமாரி. 30 வயதாகிறது.. இவர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு கடந்த சில வருஷங்களுக்கு முன்பு உடம்பில் திடீரென ஆண் தன்மை இருப்பதை போர உணர்ந்தார்.. பிறகு அதற்கான பாலியல் அறுவை சிகிச்சையும் செய்து ஆணாக மாற முடிவு செய்தார்.. அதற்காக மாநில உள்துறை அமைச்சகத்திடமும் முன் அனுமதியும் பெற்றார்.
பிறகு லீவு எடுத்து கொண்டு, லலிதா குமாரி மும்பையில் உள்ள ஜார்ஜ் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேல் 3 கட்டமாக அந்த ஆபரேஷன் நடந்தது.
இந்த ஆபரேஷன் முடிந்து திரும்பவும் வேலைக்கு வந்தார்.. ஆனால் இப்போது அவர் பெயர் லலிதா குமாரி இல்லை.. லலித்.. ஆண் போலீசாக வேலையில் வந்து சேர்ந்தார்... மராட்டிய போலீஸ் அவருக்கு ஆண் போலீஸ் அந்தஸ்து வழங்கியது.
இப்போது அவருக்குதான் பெண் பார்க்கப்பட்டு கல்யாணமும் நடந்து முடிந்துள்ளது... பொதுவாக ஆண், பெண் இருபாலாரும் ஆபரேஷன் செய்து கொண்டு வாழ்வது இயல்பு.. ஆனால், பெண்ணாக இருந்து ஆணாக மாறி, இப்போது ஒரு பெண்ணையே கல்யாணம் செய்துள்ள அந்த போலீஸ்காரரை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.
புதுமண தம்பதிக்கு வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். இவர்களின் கல்யாண போட்டோ சோஷியல் மீடியாவில் பதிவிட, பலரும் இவர்களை பாராட்டி தள்ளுகிறார்கள்!












Click it and Unblock the Notifications