11 வயது சிறுமியை வேட்டையாடிய காமூகன்கள் தந்தை, அண்ணன், தாத்தா, மாமா.. 5 ஆண்டுகளாக தொடர்ந்த கொடுமை
புணே: மகாராஷ்டிரா மாநிலம் புணேவில் கடந்த 5 ஆண்டுகளாக 11 வயது சிறுமியை அவரது தந்தை, சகோதரன், தாத்தா, தூரத்து உறவுக்காரரான மாமா ஆகியோர் தனித்தனியே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புணே நகரை சேர்ந்தவர் 45 வயது நபர். இவருக்கு 11 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளார்கள். இந்த தந்தை பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால் இவர் குடும்பத்துடன் புணேவில் வசித்து வருகிறார்.
இந்த நபரின் 11 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு நாள் இவரது பள்ளியில் ஆசிரியை பெண் பாதுகாப்பு குறித்த பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.

குட் டச்
அதில் குட் டச் , பேட் டச் உள்ளிட்டவை குறித்தும் விளக்கமாக தெரிவித்தார். அப்போது இந்த சிறுமி திடீரென ஆசிரியையிடம் ஒரு விஷயத்தை கூறினார். இதனால் திடுக்கிட்ட ஆசிரியை மீண்டும் அந்த சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டார். அப்போது அந்த சிறுமி அதையே சொன்னார்.

அந்தரங்க உறுப்பு
அதாவது அந்தரங்க உறுப்பில் மார்பு பகுதியில் சிறுமிகள், பெண்களின் தாயை தவிர வேறு யாரும் தொடக் கூடாது என ஆசிரியை பாடம் நடத்திய நிலையில் அந்த இடங்களில் தன்னை தனது தந்தை, அண்ணன், தாத்தா, தூரத்து உறவினரான மாமா ஆகியோர் தொட்டதை ஆசிரியையிடம் தெரிவித்தார்.

அதிர்ந்த ஆசிரியை
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இந்த விவகாரம் குறித்து புணே போலீஸாரிடம் புகாராக கொடுத்தார். அப்போது அங்கிருந்த பெண் போலீஸார், சிறுமியை அழைத்து விசாரித்தனர். அப்போததான் கடந்த 5 ஆண்டுகள் இவர்கள் அனைவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வருவது தெரிய வருகிறது.

கேவலம்
அதிலும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இந்த கேவலமான காரியத்தை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அதாவது அவர்கள் பீகாரில் வசித்து வரும் போதிலிருந்தே அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

6 வயதாக இருக்கும் போதே வன்கொடுமை
அதாவது சிறுமிக்கு 6 வயதாக இருக்கும் போதே தந்தை பெயரில் இந்த காமூகனிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறுமியின் அண்ணன் (மைனர்) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தாத்தா, தூரத்து உறவினர் மாமா ஆகியோரும் சிறுமியை மனசாட்சியே இன்றி வேட்டையாடியுள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதை
இதையடுத்து 45 வயது தந்தை, 60 வயது தாத்தா, 25 வயது மாமா ஆகியோரை கைது செய்தனர். சிறுமியின் அண்ணன் மைனர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதுகுறித்து புணே போலீஸார் கூறுகையில் இது கூட்டு பலாத்காரம் இல்லை. இந்த 4 பேரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இந்த காரியத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றனர்.

போக்ஸோ சட்டம்
இவர்கள் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது. தந்தை, சகோதரன், தாத்தா உள்ளிட்டோர் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் அரணாக இருப்பவர்கள். ஆனால் இந்த சிறுமியின் விஷயத்தில் வேலியே பயிரை மேய்ந்த கதையாத இவர்கள் காமக் கொடூரன்களாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியிடம் வேறு யாராவது இது போல் தவறாக நடந்துள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications