ஆன்லைன் விளையாட்டுகள்.. தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் எடுத்த மகன்..பாடம் புகட்டிய தந்தை
ராமநாதபுரம்: ஆன்லைன் விளையாட்டுகளால் தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் எடுத்த மகனுக்கு விசித்திரமாக அவரது தந்தை பாடம் புகட்டினார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவன். கடலாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் விடுமுறையில் இருந்த அந்த மாணவன், தனது தந்தையின் போனில் ஃப்ரீ பையர் எனும் ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்தார். கேம் அப்டேட் கேட்கும் நேரத்தில் தனது தாயின் ஏடிஎம் கார்டின் யுபிஐ நம்பரை பதிவு செய்துள்ளார்.

ரூ 90 ஆயிரம் வரை
இந்த நிலையில் தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் வரை பணம் பறிபோனது. இந்த சிறுவனின் தந்தை செந்தில்குமார் இ சேவை மையம் நடத்தி வருகிறார். ஆன்லைன் மூலம் பொருள்களை ஆர்டர் செய்ய சிறுவனின் தாயார் சிறுவனின் உதவியை நாடியுள்ளார். இதனால் தாயின் வங்கிக் கணக்கு குறித்த அனைத்து விவரங்களும் சிறுவனுக்கு அத்துபடி.

ஆன்லைன் கணக்கு
இந்த நிலையில் தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் விளையாட்டை விளையாட ரூ 90 ஆயிரம் வரை எடுத்த சிறுவன் அதற்கான மெசேஜ்களை டெலிட்டும் செய்து சாமர்த்தியமாக தப்பி வந்துள்ளார். இந்த நிலையில் செந்தில்குமார் பணம் எடுக்க ஏடிஎம் சென்ற போது அதில் போதிய பேலன்ஸ் இல்லை என வந்தது.

விவகாரம்
இதையடுத்து 97 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருக்கும் போது எப்படி பணம் இல்லை என வரும் என வங்கிக்கு சென்று செந்தில்குமார் கேட்டபோதுதான் மகனின் ஆன்லைன் விவகாரம் குறித்து தெரியவந்தது. இதையடுத்து ஆத்திரமடையாத செந்தில்குமார், அடித்தால் விபரீதம் என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டார்.

5 நாட்கள்
உடனே மகனிடம் இதுகுறித்து பேசிய செந்தில்குமார் அவரை அடிக்காமல் ஒரு நூதன தண்டனை கொடுத்தார். அதன்படி 1 முதல் 90 ஆயிரம் வரை தவறில்லாமல் எழுதுமாறு தண்டனை விதித்தார். சிறுவனும் 5 நாட்கள் தொடர்ந்து எழுதியதில் 3,500 வரை எழுதினான். பின்னர் கை வலிப்பதால் இதை எழுதுவதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் விளையாடுவதை நிறுத்திவிடுவதாக கூறினான். இதனால் செந்தில்குமார் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications