ராமநாதபுரம் டூ இலங்கை.. யானை தந்தம் 4 கிலோ ரூ. 1 கோடியாம்.. வசமாக போலீஸில் சிக்கிய கடத்தல்காரர்கள்
ராமநாதபுரம்: தமிழகத்தில் சமீபகாலமாக கடத்தல் சம்வங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடத்தல்களைத் தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு யானை தந்தங்கள் கடத்த முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக சட்ட விரோத சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு போதைப் பொருள், தங்கம் உள்ளிட்ட பொருள்களை கடத்துவதும், தமிழகத்தில் இருந்து யானை தந்தங்கள், அரிய வகை கடல் உயிரினங்கள், பாம்புகள் உள்ளிட்டவை கடத்தப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதுபோன்ற கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், குறைந்தபாடில்லை. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு 4 கிலோ யானை தந்தங்கள் கடத்த முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக யானை தந்தங்கள் கடத்தப்படுகிறது என்று காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்பேரில் கீழக்கரை மெரைன் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கைக்கு யானை தந்தம் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீஸார் சோதனை மேற்கொண்டதில் இலங்கைக்கு கடத்துவதற்கான 4 கிலோ யானை தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீஸார் தந்தங்களைப் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 1 கோடி ரூபாய் ஆகும். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications