2 நாளா டார்ச்சர்..அவனை விடாதீங்க.. கொல்லுங்க.. ராமேஸ்வரத்தில் காதலை ஏற்க மறுத்து கொலையான மாணவியின் தாய் கதறல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவி இன்று காலையில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருதலைக்காதலால் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் தான் அந்த இளைஞர் மாணவிக்கு 2 நாட்களாக டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், அவனை விடக்கூடாது கொல்ல வேண்டும் என்று மாணவியின் தாய் கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள சேராங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பெயர் கவிதா. இந்த தம்பதிக்கு ஷாலினி என்ற மகள் இருந்தார். இவர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிப்பை படித்து வந்தார்.

இந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் முனிராஜ்(21) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது காதலை மாணவி ஏற்கவில்லை.
இதனால் அடிக்கடி முனிராஜ், மாணவியை இடைமறித்து தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் மாணவி மறுத்துவிட்டார். இந்த தொல்லை தொடர்ந்ததால் மாணவி தனது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் முனிராஜை வார்னிங் செய்துள்ளனர்.
இந்நிலையில் தான் இன்று பள்ளிக்கு மாணவி ஷாலினி சென்று கொண்டிருந்தார். அப்போது பாதி வழியில் மாணவியை வழிமறித்த முனிராஜ் தனது காதலை ஏற்கும்படி கூறியுள்ளார். மாணவி மறுத்துள்ளார். இதனால் கோபமான முனிராஜ் கத்தியால் மாணவி ஷாலினியை குத்திவிட்டு ஓடினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் மாணவி இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய புகாரில் போலீசார் முனிராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மகள் ஷாலினியை இழந்தது பற்றி அவரது தாய் கவிதா கண்ணீர் மல்க கூறியதாவது: ‛‛என் மகள் மீது எந்த தப்பும் இல்லை. அவன் தான் 2 நாட்களாக டார்ச்சர் கொடுத்துட்டு இருந்திருக்கான். நான் லேசா வார்ன் பண்ணி தான் வைச்சேன். அவனை விடாதீங்க.. கொல்லுங்க.. அவனை கொன்றால் தான் என் பிள்ளையின் ஆன்மா சாந்தியடையும்.
என் பிள்ளை எப்படி துடிதுடித்து இறந்திருக்கும். எவ்வளவோ சொன்னேன். என் பிள்ளை ஒழுங்காக தான் இருந்துச்சி. அவன் தான் கொலை பண்ணுவேன்னு சொன்னான். என் பிள்ளை மேல் எந்த தப்பும் இல்லை. நல்ல பிள்ளையா இருந்துச்சி. இப்போது அவள் உயிரைவிட்டுட்டாள். நான் இங்கே அழுதுகிட்டு இருக்கிறேன்.
என் மகள் நன்றாக படிக்கிறவள். அவளை நல்லா படிக்க வைச்சி பெரிய ஆளாக்க வேண்டும் என்ற ஆசையில் பள்ளிக்கு அனுப்பினேன். அதுக்குள்ளேயே இப்படி கொன்னுட்டான். விடாதீங்க.. அவனை கொல்லுங்க. எல்லோரும் எங்க மேலே தான் குற்றம் சொல்றாங்க.. எங்க மேலே எந்த தப்பும் இல்லை. நாங்க எந்த தப்பும் பண்ணவில்லை. அவனைவிடாதீங்க.. கொல்லுங்க'' என கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications