நிச்சயம் கலெக்டர் ஆவேன்.. காவிய ஜனனி உறுதி! 10ஆம் வகுப்பில் அசத்திய கூலித் தொழிலாளி பெற்றோரின் மகள்!
ராமநாதபுரம்: கமுதி அருகே கூலி தொழிலாளியின் மகளான மாணவி காவிய ஜனனி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். உயர்கல்வி முடித்து கலெக்டர் ஆவதே தனது லட்சியம் எனக் கூறியுள்ளார் சாதனை மாணவி காவிய ஜனனி.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தமிழ்நாடு முழுவதும் 91.55 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 மாணவிகள் 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். திண்டுக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் 499 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி காவிய ஜனனி 50க்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆங்கில பாடத்தில் 100, கணித பாடத்தில் 100, அறிவியல் பாடத்தில் 100, சமூக அறிவியல் பாடத்தில் 100 மற்றும் தமிழில் 99 மதிப்பெண்கள் என மொத்தம் 499 மதிப்பெண்களை பெற்று கமுதி மாணவி காவிய ஜனனி சாதனை படைத்துள்ளார்.
கமுதி அருகே உள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் - வசந்தி தம்பதியரின் மகள் காவிய ஜனனி. தர்மராஜ் திருப்பூரில் வெல்டிங் பட்டறை ஒன்றில் வெல்டராக பணியாற்றி வருகிறார். வசந்தி பேரையூரில் கடை ஒன்றில் வியாபாரியாக கூலி வேலை செய்து வருகிறார்.
தாயும் தந்தையும் கூலி வேலை செய்து மகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்து தமது பெற்றோரையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார் காவியா ஜனனி.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்ற மாணவி காவிய ஜனனி பேசுகையில், "சிறு வயது முதலே என்னை எனது பெற்றோர் மிகவும் ஊக்கமளித்து படிக்க வைத்தனர். குடும்பத்தின் சூழ்நிலை கருதி கடுமையாக படித்து வந்தேன். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் எடுப்பதற்கு பயிற்சி அளித்தனர்.
பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கலெக்டர் ஆவது எனது லட்சியம். அதற்கு ஏற்ற பாடப்பிரிவை 11 ஆம் 12ம் வகுப்பில் தேர்வு செய்து படித்து பிளஸ் 2விலும் அதிக மதிப்பெண் பெறுவேன். பின்னர் கல்லூரி படிப்பை முடித்து நிச்சயம் கலெக்டர் ஆவேன்" எனக் கூறி உள்ளார்.
பின் தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தில், பெற்றோர் கூலி வேலை செய்து வரும் நிலையில் நன்றாகப் படித்து 499 மதிப்பெண்கள் எடுத்துள்ள காவியா ஜனனிக்கு சக மாணவர்கள், ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications