ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டமா? உண்மை என்ன.. இதை பாருங்க
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டம் இல்லை, தண்ணீரை சேமிக்காத மாவட்டம் என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு குறித்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உண்மை நிலை குறித்தும் பார்ப்போம்.
தமிழகத்தின் மிக மோசமான தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் இருக்கிறது.. வைகை நதியினை கடல் கலக்காத நதி கிண்டலாக சொல்வார்கள். ஏனெனில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் போகும்போது அங்குள்ள ஊரணி ஏறி கேணிகளை நிரப்பி விட்டு செல்லும்போது வைகை வெள்ளம் சிறு கால்வாய் போல் மாறிவிடுமாம்.. ஏனெனில் அந்த அளவிற்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி இருக்கும் என்று சொல்வார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கண்மாய், ஊருணி தண்ணீரைத்தான் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் நம்பி உள்ளனர். மழையும் பொய்த்துவிட்டால் ஊருணி, கண்மாய்கள் வறண்டு தண்ணீருக் காக அல்லல்படும் நிலை அடிக்கடி ஏற்படும். அது சரி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை பெய்யாதா.. நிச்சயம் இது உண்மை இல்லை .. இராமநாதபுரம் மாவட்டத்தில் நன்கு மழை பெய்யும்.. எப்படி பெய்யும் என்றால்.. ராமநாதபுரத்தில் வருடத்திற்கு 827 மி.லி. மழை பெய்யுமாம் .. ஆனால் இந்த ஊரில் உள்ள சிக்கல் என்னவென்றால்.. கடல் நீரால் நிலத்தடி நீர் தீவிர உப்புத் தன்மையைக் கொண்டிருப்பது தான் . இவ்வாறான சூழலில் லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரே மக்களின் பிரதானக் குடிநீராக நம்பும் நிலை இருக்கிறது.
இந்நிலையில், நிர்மல் ராகவன் என்பவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து நீர் ஆதாரங்களை மேம்படுத்த வழிகாட்டி வருகிறார்..இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றுடன் பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவினை பார்ப்போம்.
#BounceBackRamnad
— Nimal Raghavan (@being_nimal) April 9, 2024
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆறாம் தேதி ஒரு அம்மாவிடம் பேசி ஒரு வீடியோ பதிவிட்டோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏழு கிராமங்களுக்கு நீராதராமாக விளங்கிய குடிதண்ணீர் குளம் தண்ணீரில்லாமல் நடைபாதையாக மாறிய அவல நிலையை. இராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் வட்டம்… pic.twitter.com/Xy5j7U6bvB
"கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆறாம் தேதி ஒரு அம்மாவிடம் பேசி ஒரு வீடியோ பதிவிட்டோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏழு கிராமங்களுக்கு நீராதராமாக விளங்கிய குடிதண்ணீர் குளம் தண்ணீரில்லாமல் நடைபாதையாக மாறிய அவல நிலையை. இராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் வட்டம் திருப்பாலக்குடி குளம்.
நாம் சென்று வந்த பின், அந்த அம்மாவிடம் சத்தியம் செய்தது போல் அந்த குளத்திற்கு தண்ணீர் சென்றது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு. ஆறு கிராமத்து மக்களுக்கும், வந்து செல்வோருக்கும். கால்நடைகளுக்கும் மீண்டும் குடிதண்ணீர் குளமாக மாறியுள்ளது. ஏப்ரல் மாத்த்திலும் இந்த குளம் நிறைய தண்ணீரை காண முடிந்தது. அந்த குளத்தில் தண்ணீரை கண்டபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
சென்ற வருடம் அந்த அம்மா எதாவது குடித்து விட்டு போங்க என்று சொன்னபோது இந்த குளத்திற்கு தண்ணீர் வந்தவுடன் சேர்ந்து குடிப்போம் என்று சொல்லிவிட்டு வந்தேன். இப்போது தண்ணீர் வந்து விட்டது. பெருமகிழ்ச்சியுடன் அந்த குளத்தின் தண்ணீரை இருவரும் சேர்ந்து குடித்து விட்டு அந்த அம்மாவிடம் விடைபெற்றேன். என் இயற்கை அன்னையே உனக்கு நன்றி. திரும்ப திரும்ப சொல்றேன், ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டம் இல்லை, தண்ணீரை சேமிக்காத மாவட்டம்!" என்று கூறியுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications