Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டமா? உண்மை என்ன.. இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டம் இல்லை, தண்ணீரை சேமிக்காத மாவட்டம் என்று நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு குறித்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உண்மை நிலை குறித்தும் பார்ப்போம்.

தமிழகத்தின் மிக மோசமான தண்ணீர்ப் பஞ்சம் நிலவும் மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் இருக்கிறது.. வைகை நதியினை கடல் கலக்காத நதி கிண்டலாக சொல்வார்கள். ஏனெனில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் போகும்போது அங்குள்ள ஊரணி ஏறி கேணிகளை நிரப்பி விட்டு செல்லும்போது வைகை வெள்ளம் சிறு கால்வாய் போல் மாறிவிடுமாம்.. ஏனெனில் அந்த அளவிற்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி இருக்கும் என்று சொல்வார்கள்.

Is Ramanathapuram District a Waterless District What is the truth Look at this

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கண்மாய், ஊருணி தண்ணீரைத்தான் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் நம்பி உள்ளனர். மழையும் பொய்த்துவிட்டால் ஊருணி, கண்மாய்கள் வறண்டு தண்ணீருக் காக அல்லல்படும் நிலை அடிக்கடி ஏற்படும். அது சரி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை பெய்யாதா.. நிச்சயம் இது உண்மை இல்லை .. இராமநாதபுரம் மாவட்டத்தில் நன்கு மழை பெய்யும்.. எப்படி பெய்யும் என்றால்.. ராமநாதபுரத்தில் வருடத்திற்கு 827 மி.லி. மழை பெய்யுமாம் .. ஆனால் இந்த ஊரில் உள்ள சிக்கல் என்னவென்றால்.. கடல் நீரால் நிலத்தடி நீர் தீவிர உப்புத் தன்மையைக் கொண்டிருப்பது தான் . இவ்வாறான சூழலில் லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீரே மக்களின் பிரதானக் குடிநீராக நம்பும் நிலை இருக்கிறது.

இந்நிலையில், நிர்மல் ராகவன் என்பவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்து நீர் ஆதாரங்களை மேம்படுத்த வழிகாட்டி வருகிறார்..இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றுடன் பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவினை பார்ப்போம்.

"கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆறாம் தேதி ஒரு அம்மாவிடம் பேசி ஒரு வீடியோ பதிவிட்டோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏழு கிராமங்களுக்கு நீராதராமாக விளங்கிய குடிதண்ணீர் குளம் தண்ணீரில்லாமல் நடைபாதையாக மாறிய அவல நிலையை. இராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் வட்டம் திருப்பாலக்குடி குளம்.

நாம் சென்று வந்த பின், அந்த அம்மாவிடம் சத்தியம் செய்தது போல் அந்த குளத்திற்கு தண்ணீர் சென்றது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு. ஆறு கிராமத்து மக்களுக்கும், வந்து செல்வோருக்கும். கால்நடைகளுக்கும் மீண்டும் குடிதண்ணீர் குளமாக மாறியுள்ளது. ஏப்ரல் மாத்த்திலும் இந்த குளம் நிறைய தண்ணீரை காண முடிந்தது. அந்த குளத்தில் தண்ணீரை கண்டபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

சென்ற வருடம் அந்த அம்மா எதாவது குடித்து விட்டு போங்க என்று சொன்னபோது இந்த குளத்திற்கு தண்ணீர் வந்தவுடன் சேர்ந்து குடிப்போம் என்று சொல்லிவிட்டு வந்தேன். இப்போது தண்ணீர் வந்து விட்டது. பெருமகிழ்ச்சியுடன் அந்த குளத்தின் தண்ணீரை இருவரும் சேர்ந்து குடித்து விட்டு அந்த அம்மாவிடம் விடைபெற்றேன். என் இயற்கை அன்னையே உனக்கு நன்றி. திரும்ப திரும்ப சொல்றேன், ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் இல்லாத மாவட்டம் இல்லை, தண்ணீரை சேமிக்காத மாவட்டம்!" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+