Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூழ்ச்சிகார கும்பல்.. ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர்.. டென்ஷன் ஆகி ஓபிஎஸ் மகன் வெளியிட்ட வீடியோ!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம். ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி, அதிமுக கூட்டணி சார்பில் ஜெயப்பெருமாள் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.

O Panneerselvam son Jayapradeep video about more in the name OPS contesting in Ramanathapuram

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வரும் ஓ.பன்னீர்செல்வம், இந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார் ஓபிஎஸ். தங்களது பலத்தை நிரூபிப்பதற்காக ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளார் ஓபிஎஸ்.

நேற்று முன் தினம் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில் திடீர் திருப்பமாக மதுரை மேக்கிழார்பட்டியை சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் என்ற மற்றொரு நபர் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக நேற்று முன் தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் நிற்கும் நிலையில் அதே பெயரில் இன்னொருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதே பெயரைக் கொண்ட மேலும் 3 நபர்கள் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் வரை இருப்பதால், இன்னும் எத்தனை ஓபிஎஸ் வருவார்களோ என்று கலக்கத்தில் உள்ளனர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்.

இந்தநிலையில், இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ராமநாதபுரம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவர் மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரும் வரை வழி நெடுகிலும் 2000க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்கள் தன்னெழுச்சியாக வந்து வரவேற்றனர். தேர்தலில் வெற்றிக்கனியை ஓபிஎஸ்ஸிடம் சமர்ப்பிப்போம் என்பது மக்களுடைய முகத்திலும் மிகவும் நன்றாக தெரிந்தது.

அதனை கேள்விப்பட்ட சூழ்ச்சிகார எடப்பாடி கும்பலின் அல்லக்கைகள் ஒரு சிலர், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 நபர்களை தமிழ்நாடு முழுவதும் இருந்து வரவழைத்து களத்தில் இறங்கியுள்ளது. அந்த அப்பாவிகளை கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். எங்களது ராமநாதபுரம் மக்களை எந்த அளவுக்கு நீங்கள் நினைத்திருக்கிறீர்கள்? அவர்களை என்ன முட்டாளாக நினைக்கிறீர்களா?

எங்களது மக்கள் மிகவும் தெளிவாக தர்மத்தின் பக்கமும் நியாயத்தின் பக்கமும் வாக்களிக்க கூடியவர்கள். அவர்களுடைய வாக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நாள் அன்று எதிரொலிக்கும். அதனுடைய ரிசல்ட் இரு மாதங்களுக்கு பிறகு தெரிய வரும்போது இந்த சூழ்ச்சிகார கும்பலின் முகத்தில் கரியை பூசுவார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+