Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏற்கனவே ‘தண்ணி’ இல்லாக் காடு..இதில் ஆக்கிரமிப்பு வேறயா? ராமநாதபுரத்தில் காணாமல் போகும் குளங்கள்?!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நகராட்சி அதிகாரிகளின் துணையோடு ஊருணியின் கரை ஆக்கிரமிக்கப்பட்டு கடை கட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என உயர்நீதிமன்றமே எச்சரித்திருக்கும் நிலையில், அவசர அவசரமாக கடை கட்ட அனுமதி அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை வறண்ட மாவட்டம் என்ற வசவுச்சொல் மட்டும் இன்றளவும் தொட்டுக் கொண்டு தொடர் கதையாக உள்ளது. மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாத நிலையில் பெய்யும் மழை நீரை சேகரித்து வைப்பதற்கும் நீர் வழித்தடங்களை பராமரிப்பதற்கு முறையான திட்டங்கள் இல்லை.

Ramanathapuram Municipality

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் நகர் பகுதிக்குள் முன்னதாக பயன்பாட்டில் இருந்து வந்த பெரும்பகுதி குளங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.

Ramanathapuram Municipality

இந்த நிலையில் இருக்கும் ஊருணி, குளங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்கும் எந்தத் திட்டமும் பெரிய அளவில் செயல்படுத்தப்படாதோடு நீர் நிலைகளை எல்லாம் ஆக்கிரமித்து அவற்றின் சுவடுகளை அழிக்கும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு அதிகாரிகளும் கண்மூடியும், கண்டும் காணாமலும் இருப்பதாகவும் நீர் நிலைகளை பாதுகாப்பதில் எல்லாம் பெரிய அளவில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

Ramanathapuram Municipality

இந்த நிலையில் இராமநாதபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கிடா வெட்டி ஊருணி கரை பகுதியில் புதிதாக தனிநபர் ஒருவருக்கு விதிகளை மீறி அவசர அவசரமாக கடை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நகராட்சியில் இல்லாத ஒருவருக்கு நகராட்சியின் மையப் பகுதியில் கட்டிடம் கட்டி ஒப்படைப்பதற்கு அதிகாரிகள் அவசரம் காட்டுவது ஏன்? நீர்நிலை ஊருணி மற்றும் சாலையில் கடை கட்டுவதற்கு நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றலாமா நிலவாடகைக்கு விடப்படுகிறது, எனில் அதன் வாடகை எவ்வளவு? வாடகை தொகையை வசூலிப்பது யார்? அரசும் நீதிமன்றமும் நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டும் கூட ஊருணியின் கரையில் இவ்வாறு கடை கட்ட அதிகாரிகள் இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏன்? என பல்வேறு கேள்விகள் எழுகிறது.

Ramanathapuram Municipality

தொடர்பாக ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சபிதா பர்வினிடம் கேட்டபோது இது தொடர்பாக ஏற்கனவே புகார் வந்ததன் அடிப்படையில் பணியை தடுத்திருப்பதாகவும் மீண்டும் பணி நடப்பது தனக்கு தெரியாது உடனடியாக அதிகாரியை அனுப்பி பணியை நிறுத்துகிறேன் என விளக்கம் அளித்தார். ஆனால் அடுத்த நாளே கூடாரம் அமைத்து தயார் நிலையில் நிரந்தர கட்டுமான கடை எழுப்பப்பட்டது. சிறிய ரக பெட்டிக்கடை அமைக்க அனுமதி அளித்திருப்பதாக கூறப்படும் நிலையில் நிரந்தர கட்டுமானம் கொண்ட மேற்கூறையிட்ட கடையை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தது யார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடுக்கடுக்காக வந்து நிற்கும் நிலையில் ராமநாதபுரம் நீர்நிலைகளை பாதுகாக்க இனியாவது நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகமும் முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையமைத்து நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+