Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளி மாணவனை கம்பால் கொடூரமாக அடித்த பொதுமக்கள்.. ராமநாதபுரம் அருகே கொடுமை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மாரியூர் கிராமத்தில் கடையில் மிட்டாய் திருடியதாக கூறி அக்கிராம பெரியோர்கள் முன்னிலையில் பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக அடித்த வீடியோ தற்போது வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,

மாரியூர் கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் இவன் சிறிய அளவில் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரியூர் கிராமத்தில் ஒரு கடையில் பாட்டிலில் வைத்திருந்த மிட்டாயை திருடியதாக கூறி மாரியூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தரையில் அமர்ந்து அவர்கள் அக்கிராமத்தின் ஜமாத்தார்கள் முன்னிலையில் திருடியதாக கூறப்படும் பள்ளி மாணவனையும் அழைத்து வந்து கம்பால் ஒருவர் தாக்கிய பின் மற்றொருவரும் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

விசாரணை

விசாரணை

இந்தத் தாக்குதலில் பள்ளி மாணவனுக்கு தலையில் பலத்த காயம் அடைந்து தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து மாணவனின் தாயார் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் இதையடுத்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போராட்டம்

போராட்டம்

சென்னையில் அரசுப் பேருந்து கூரை மீது ஏறிய பள்ளி மாணவா்களை கண்டித்த ஓட்டுநா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் சாலைகளில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புரசைவாக்கம் பேருந்து

புரசைவாக்கம் பேருந்து

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை புதன்கிழமை மோகன கிருஷ்ணன் ஓட்டினாா். மயிலாப்பூா் லஸ் பகுதி பள்ளி மாணவா்கள் சுமாா் 10 போ் பயணித்தனா். அவா்களில் சிலா் படியில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரை மேல் ஏறி நின்றவாறும் பயணித்துள்ளனா். பேருந்து புரசைவாக்கத்தில் செல்லும்போது மாணவா்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. உடனே ஓட்டுநா் மோகனகிருஷ்ணன், பேருந்தை நிறுத்தியுள்ளாா். அவா், மாணவா்களை மேற்கூரையில் இருந்து கீழே இறங்குமாறும், ஒழுங்காகப் பயணிக்குமாறும் கூறியுள்ளாா்.

பேருந்து ஓட்டுநர்கள்

பேருந்து ஓட்டுநர்கள்

இதனால் ஆத்திரமடைந்த மாணவா்கள், மோகனசுந்தரம் மீது கற்களை வீசி தாக்கியதில் காயம் ஏற்பட்டது. உடனே மாணவா்கள் அங்கிருந்து தப்பியோடினா். இதைக் கண்டித்து அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநா்கள், சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி விட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

தகவலறிந்த சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையா் கே.ராஜேந்திரன், கீழ்ப்பாக்கம் துணை ஆணையா் கே.காா்த்திகேயன் ஆகியோா் சம்பவ இடம் விரைந்து வந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சிறிது நேர பேச்சுவாா்த்தைக்கு பின்னா், பேருந்து ஓட்டுநா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இந்தப் போராட்டத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+