பாஜக நிர்வாகி தீக்குளிப்பு சம்பவத்தில் ‘ட்விஸ்ட்’.. குடி போதை.. கிரிமினல் பின்னணி.. காவல்துறை ஷாக்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் போலீஸ் ஸ்டேஷனில் பாஜக நிர்வாகி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றப் பின்னணி கொண்ட அந்த இளைஞர் குடிபோதையில் தீக்குளித்ததாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். பொய் வழக்கு போட்டு காவல்துறையினரின் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் காரணமாகவே தமிழ்ச்செல்வன் தீக்குளித்ததாக குற்றம்சாட்டி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாடு காவல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறையின் காரணமாக, துடிப்பான இளைஞரான பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் தீக்குளித்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன், தமிழக காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து, ஆளுங்கட்சியினர் தூண்டுதலுக்கேற்ப, பாஜகவினரை மிரட்டுவதையும் துன்புறுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது. காவல்துறையினரின் இது போன்ற பாரபட்சத் தன்மை தொடருமேயானால், தமிழகம் முழுவதும் பாஜகவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இநிலையில், இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பார்த்திபனூர் நல்லூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் தொடர்ச்சியாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக இவர் மீது பார்த்திபனூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பாஜக ஒன்றிய இளைஞரணி துணை தலைவராக இருந்து வரும் தமிழ்செல்வன் அடிக்கடி குடிபோதையில் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர்.
இந்நிலையில் மாவட்ட அளவில் குற்றச்செயல்களில் ஈடுவோரை கண்காணிக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்செல்வத்தின் மீதுள்ள வழக்குகளை அடிப்படையாக கொண்டு அவருக்கு பிரிவு 110ன் கீழ் பரமக்குடி வட்டாட்சியர் மூலம் அழைப்பாணை சார்பு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 4ம் தேதி எவ்வித வற்புறுத்தல், அச்சுறுத்தல் இன்றி தாமாகவே முன்வந்து, வரும் ஒரு வருட காலத்திற்கு எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என பிணை பத்திரம் எழுதி கொடுத்து சென்றார்.

இந்நிலையில் அன்று இரவு 8.45 மணிக்கு குடிபோதையில் வந்த தமிழ்செல்வம், பார்த்திபனூர் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தூரம் முன்பாக தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றவரை காவல்துறையினர் தடுத்து பரமக்குடி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தமிழ்செல்வத்தின் நெற்றியில் சிறிய காயமே ஏற்பட்ட நிலையில் அன்றைய தினமே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த செப். 5ஆம் தேதி (நேற்று) பார்த்திபனூர் பைபாஸ் மூன்று முனை அருகே மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அன்று மாலை அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
அவினாசி எல்.முருகன், சாத்தூர் நயினார், பல்லடம் அண்ணாமலை.. கமலாலயத்தில் ரெடியான பாஜக வேட்பாளர் லிஸ்ட் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications