அதிகாலை நேரத்தில் சோகம்.. ராமநாதபுரம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலி!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வந்த கீழக்கரை போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் அதிவேகமாக வந்ததால் விபத்து நிகழ்ந்ததா அல்லது தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் இருந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்த போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு கார்களின் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் உயிழந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று ஆந்திராவைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது. அதில் ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர்.
அதேசமயம் கீழக்கரை அயில் ஏர்வாடி நோக்கி மற்றொரு கார் சென்றுள்ளது. இந்த நிலையில் கீழக்கரை அருகே இரு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications