அதிகாலை நேரத்தில் சோகம்.. ராமநாதபுரம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலி!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 ஐயப்ப பக்தர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வந்த கீழக்கரை போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் அதிவேகமாக வந்ததால் விபத்து நிகழ்ந்ததா அல்லது தூக்க கலக்கத்தில் ஓட்டுநர் இருந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்த போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு கார்களின் முன்பகுதியும் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் உயிழந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று ஆந்திராவைச் சேர்ந்தது என தெரியவந்துள்ளது. அதில் ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர்.
அதேசமயம் கீழக்கரை அயில் ஏர்வாடி நோக்கி மற்றொரு கார் சென்றுள்ளது. இந்த நிலையில் கீழக்கரை அருகே இரு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications