ஜெட்டா அமெரிக்க தூதரகம் மீது திடீரென மர்ம நபர் துப்பாக்கிச்சூடு! பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி
ரியாத்: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். அதேபோல இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
ஜெட்டா நகரம் சவுதி அரேபியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். மக்கா, மதினா எனப்படும் புனித தலங்களுக்கான நுழைவு வாயிலும் இதுதான். செங்கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கும் இந்நகரம், சவுதியின் மிகப்பெரிய துறைமுக நகரங்களில் ஒன்றாகும். இங்கு அமெரிக்க தூதரகம் ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த தூதரகத்தின் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்.

காரில் வந்திறங்கிய அவர், தூதரகத்தின் வாசலில் கண்ணில் பட்டதையெல்லாம் சரமாரியாக சுட்டுத்தள்ள தொடங்கியுள்ளார். திடீரென துப்பாக்கிச்சூடு நடந்ததால் தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் ஒருவர் இதனை எதிர்த்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக வீரர் உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவத்தை அறிந்த சவுதி பாதுகாப்பு படையினர் உடனடியாக மர்ம நபரை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தூதரகம் உடனடியாக மூடப்பட்டது. இதில் தூதரகத்தின் உள்ளே இருந்த மக்கள், அதிகாரிகள் என யாரும் காயமடையவில்லை. மேலும் இந்த விவகாரம் குறித்து சவுதி பாதுகாப்புப்படை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. தற்போது வரை இந்த தாக்குதலுக்கான நோக்கம் தெரியவில்லை என சவுதி கூறியுள்ளது.
மர்ம நபர் தாக்கியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் நேபாளத்தை சேர்ந்தவராவார். சவுதியின் ஜெட்டா நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுபோன்று தாக்குதல் சம்பவத்திற்கு உள்ளாவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் ஏற்கெனவே 2004ம் ஆண்டு 5 பயங்கரவாதிகள் இந்த தூதரகத்தின் மீது சரமாரி தாக்குதல்களை நடத்தினர். அதேபோல கடந்த 2016ம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதலும் இங்கு நடத்தப்பட்டுள்ளது.
2004ம் ஆண்டு தாக்குதலுக்கு அல்-கொய்தா மீது அந்நாட்டு ராணுவம் குற்றம்சாட்டியது. இந்த வரிசையில் தற்போது மற்றொரு தாக்குதலும் அரங்கேறியுள்ளது. தொடர் தாக்குதலுக்கான காரணம் கண்டறியப்பட்டு அதற்கான தீர்வை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications