இஸ்ரேல் உடன் அதிகரித்த நெருக்கம்.. அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்க திட்டம்! சவுதி அரேபியா ஷாக் முடிவு
ரியாத்: இஸ்ரேல் நாட்டுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாடு சொந்தமாக அணுசக்தி திட்டத்தை செயல்படுத்த உதவுவதாகவும் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் சவுதிக்குமான உறவு குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இதனை கூறியுள்ளார். கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவானதிலிருந்து அதை சவுதி அரேபியா அங்கீகரிக்கவில்லை. இதற்கு காரணமாக பாலஸ்தீனம் உடனான மோதல் போக்கை சவுதி சுட்டிக்காட்டி வருகிறது. ஜெருசேலம் நகரத்தை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொள்வதால் இரு நாட்டிலும் பொருளாதார பிரச்னைகள் மேலெழுந்துள்ளன.

இதை முக்கியமாக காரணமாக முன்னிறுத்தி அடிக்கடி இஸ்ரேலின் போக்கை சவுதி விமர்சித்து வந்தது. ஆனால், இதே நிலைமை நீடித்தால் இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகப் பெரிய ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. இது இந்திய சந்தையை ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இஸ்ரேலுடன் சவுதியை இணக்கமாக போக வைக்க அமெரிக்கா சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது வரை சவுதியிடம் அணு சக்தி தொழில்நுட்பம் கிடையாது. இதை அமெரிக்கா தருவதாக கூறியிருக்கிறது. ஆனால் இதற்காக சவுதி, இஸ்ரேலுடன் இணக்கமாக போக வேண்டும். இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், இஸ்ரேலுடனான உறவில் நெருங்கி வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் பாலஸ்தீன விவகாரத்தில் பஞ்சாயத்துகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இஸ்ரேல் தனது சொந்த அணுசக்தி திட்டத்தை உருவாக்க சவுதி உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சவுதி-இஸ்ரேல் உறவை ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்லும், மத்திய கிழக்கில் இஸ்ரேலை சிறந்த வீரராக உருவாக்கும் இந்த நேரத்தில் பாலஸ்தீன மக்களுக்கும் விடிவு காலம் உருவாகும் என்றும் சல்மான் கூறியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் பெறுவது குறித்த அச்சுறுத்தலையடுத்து அமெரிக்கா-சவுதி அரேபியா-இஸ்ரேல் ஓரணியில் திரண்டு வந்திருக்கின்றன. ஒருவேளை ஈரான் அணு ஆயுதத்தை பெற்றால் சவுதியும் அணு ஆயுதத்தை பெறும் என்றும் இளவரசர் கூறியுள்ளார்.
-
"ஈரான் போர் முடிவுக்கு வரக்கூடாது.. இஸ்ரேலின் கொடூர திட்டம்!" லாரிஜானி படுகொலை உணர்த்துவது இதை தான் -
பொழைக்கப் போன இடத்துல கைய கால வச்சுட்டு சும்மா இருக்கனும்! 17 இந்தியர்களை கொத்தாக தூக்கிய அமீரகம்! -
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! -
விட மாட்டோம்..தேடிப் போய் ’சம்பவம்’ செய்வோம்! குழந்தைகளை கொ*ற குற்றவாளி! ஈரான் ராணுவம் எடுத்த சபதம்! -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா.. வத்தலக்குண்டுக்கு வலிக்கும்! வாழ வைக்காத வாழை இலை! வதங்கும் விவசாயிகள்! -
ஈராக்கில் நடந்ததை போல.. ஈரானிலும் நடக்கப்போகுது! தரைவழி போருக்கு ரெடியான அமெரிக்கா! -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்!












Click it and Unblock the Notifications