5 வருஷமா எங்க போனீங்க அன்புமணி! கேள்வி கேட்ட அதிமுக தொண்டரின் வாயில் குத்திய செம்மலை

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வேட்பாளர் அன்புமணி ராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் வாயில் சரமாரியாக செம்மலை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது.

AIADMK member attacked by semmalai, who ask question to anbumani

அன்றைய தினமே 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் ஆகியவை இணைந்த ஓரணியாக போட்டியிடுகின்றன. இதேபோல் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஓராணியாக போட்டியிடுகின்றன. அமமுக, கமலின் மநீம, சீமானின் நாம் தமிழர் உள்ளிட்டவை தனியாக போட்டியிடுகின்றன.

தர்மபுரி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவின் அன்பமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் சேலம் மாவட்டம் மோச்சேரி அருகே சிந்தாமணியூரில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் இடையே அதிமுக தொண்டர் ஒருவர், அன்புமணி ராமதாஸை பார்த்து 5 வருடங்களாக எங்கே போனீர்கள் என கேட்டார். இந்த கேள்வியால் ஆத்திரமடைந்த செம்மலை, கேள்வி கேட்ட தொண்டரின் வாயில் சரமாரியாக தாக்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+