சேலம் இளைஞருக்கு பிறந்த நாளே இறந்த நாளானது.. இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த போது விபரீதம்
சேலம்: சேலத்தை சேர்ந்த இளைஞருக்கு பிறந்த நாளே இறந்த நாளாகியுள்ளது. சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து அது விபரீதத்தில் முடிந்துள்ளது. பிறந்தநாளன்று சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் உயிரிழந்துள்ளனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில் நண்பர்களுடன் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
பின்னர், அவரது நெருங்கிய நண்பர்களான சுந்தர் மற்றும் கௌதம் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். இன்ப அதிர்ச்சி தருவதற்காக ரஞ்சித்குமாரை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, சாலை விபத்தில் சிக்கி ரஞ்சித்குமார் மற்றும் கௌதம் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம்
சேலம் சீலநாயக்கன்பட்டி பொன்னுசாமி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 20). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் ரஞ்சித்குமாருக்கு கடந்த மார்ச் 9ம் தேதி பிறந்த நாள். வியாழக்கிழமை காலையில் அவர் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

கல்லூரி
கல்லூரி முடிந்ததும் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டியை சேர்ந்த சங்கர் மகன் கௌதம் (19), சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தர் (22) ஆகிய 2 பேருடன் ரஞ்சித் குமார் இருசக்கர வாகனத்தில் சீலநாயக்கன்பட்டியை நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிளை சுந்தர் ஓட்டினார்.

உயிருக்கு போராட்டம்
கௌதமும், ரஞ்சித்குமாரும் வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்தனர். சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற சரக்கு வாகனமும், மோட்டார் சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பேரும் பலத்த காயத்துடன் சாலையில் உயிருக்கு போராடினார்கள்.

ரஞ்சித்குமார்
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சிலர், 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது கல்லூரி மாணவரான ரஞ்சித்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர்.

வழக்கு பதிவு
இதனிடையே உடல் மோசம் அடைந்ததால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கௌதம் பரிதாபமாக இறந்தார். சுந்தர் பலத்த காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பெரும் சோகம்
விபத்தில் பலியான 2 பேரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் பிறந்த நாள் கொண்டாடி இன்ப அதிர்ச்சி கொடுக்க நண்பர்கள் நினைத்தது விபரீதத்தில் முடிந்துள்ளது. இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications