அழகாய் இருக்கிறாய்.. சேலம் அரசு பள்ளி மாணவியுடன் நெருக்கமாய் போட்டோ.. ஆசிரியரால் ஆடிப்போன ஓமலூர்
சேலம்: சேலம் அரசு பள்ளி மாணவி, ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்.. ஓமலூர் போலீஸில் இவர் தந்த புகார், ஒட்டுமொத்த சேலம் மாவட்டத்தையும் அதிர வைத்து வருகிறது. இது தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகள் விரைந்து நடவடிக்கையும் எடுத்திருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூர்.. இங்கு அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் உள்ள இந்த மாதிரி பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.. அந்தவகையில், ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவியும், ஹாஸ்டலிலேயே தங்கி பிளஸ்-1 படித்து வருகிறார்.

உடற்கல்வி ஆசிரியர்: இதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக சிவக்குமார் பணியாற்றி வருகிறார்.. 40 வயதான இவர், ஈரோட்டை சேர்ந்தவர்.. இவர், கடந்த 2-ந் தேதி, அந்த மாணவிக்கு சில்மிஷம் செய்து, பாலியல் இம்சை தந்து வந்ததாக தெரிகிறது..
இந்த சம்பவம் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்..
மாணவி சிவக்குமார்: இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திலிருந்து கிளம்பி வந்த அதிகாரிகள் , சம்பந்தப்ப்டட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், மாணவிக்கு சிவக்குமார் பாலியல் தொல்லை தந்தது உறுதியானது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிவக்குமார் கைதாகி உள்ளார்.
சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார் சிவக்குமார்.. பாதிக்கப்பட்ட மாணவிடம் நெருக்கமாக நின்றுக்கொண்டு போட்டோ எடுத்துள்ளார்..
இந்த போட்டோவை தன்னுடைய செல்போனிலும் எடுத்து வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.. பிறகு மாணவியிடம் தினமும் அந்த போட்டோவை காட்டி வர்ணித்திருக்கிறார்.. "நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய்" என்று சொல்லியே பாலியல் தொல்லை தந்ததாக சொல்லப்படுகிறது.
சிவக்குமார்: ஆசிரியரின் தவறான நோக்கம் அறிந்த அந்த மாணவி, சிவக்குமாரிடமிருந்து செல்போனை பிடுங்கி அதிலிருந்த தன்னுடைய போட்டோவை அழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகே தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் தந்துள்ளார்... இதைத்தவிர, 1098 உதவி எண்ணுக்கும், பள்ளி சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.. பிறகு குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, இறுதியாக போலீசுக்கு புகார் தந்திருக்கிறார்கள். தற்போது ஆசிரியரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications