Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.10 சாப்பாட்டில் விழுந்த சேலம்.. ரூ.500 கோடியை விஜய பானுவிடம் இழந்தும்.. இதோ இன்னொரு "டபுளிங்"

Subscribe to Oneindia Tamil

சேலம்: பொதுமக்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட ஏஜென்ட்டுகள் உள்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பெயரில் பணமோசடி நடந்த விவகாரம், மிகப்பெரிய பரபரப்பை இன்னமும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..

Salem rs10 food vijaya banu 10

ஆந்திரா, வேலூர் தவிர, சேலத்தில் மட்டுமே 2000க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.500 கோடி மோசடி செய்திருக்கிறார் அந்த அறக்கட்டளையின் நிர்வாகி விஜயபானு.

10 ரூபாய்க்கு சோறு போட்ட விஜயபானு

சேலம் மக்கள் பலர் எங்களை தேடி வந்தனர். பயிற்சியின்போது, 10 ரூபாய்க்கு சாப்பாடு, டீ மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தோம்.. இப்படி அறிவித்ததுமே நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. அதன் பிறகு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, பண மோசடி திட்டத்தை, அறிமுகம் செய்தேன் என்று கைதான விஜயபானு வாக்குமூலமும் தந்துள்ளார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் 216 நபர்கள், முதலீடாக 4,31,95,500 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்திருக்கிறார்கள்.. பொதுமக்களை ஏமாற்றிய நான்கு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள நிலையில், அதன் விசாரணை தீவிரமாகி வருகிறது. இந்த பரபரப்பே இன்னமும் அடங்காத நிலையில், பொதுமக்களிடம் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக தருவதாகக் கூறி மீண்டும் ஒரு மோசடி நடந்துள்ளது.. .

மீண்டும் ஒரு பண மோசடி

சேலம் சொர்ணபுரி அய்யர் தெருவில் 2 வருடங்களுக்கு முன்பு ராஜேஷ் (35) என்பவர் கிரீயேட் பியூச்சர் இந்தியா என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கினார். பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு இரட்டிப்பாக பணம் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து, அதற்கான முகவர்களையும் நியமித்தார். இதை நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள், ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது.

இப்போது, அந்த நிறுவனத்தை மூடுவதாக கிடைத்த தகவலின் பேரில் நிதி நிறுவனத்தை நேற்று முன்தினம் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீஸார் நிறுவனம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

கோடி கணக்கான பணம் சுருட்டல்

அப்போதுதான், நிதி நிறுவன உரிமையாளர்களான ராஜேஷ், ஹரி பாஸ்கர், மற்றொரு ராஜேஷ் அவரது மனைவி சத்திய பாமா ஆகியோர் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தில் இருந்து ரூ.2.85 கோடி ரொக்கம், 300 கிராம் தங்கம், 200 கிராம் வைரம், இரண்டு கிலோ வெள்ளியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், ராஜேஷ் உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்தனர்.

இதனிடையே, விசாரணையின்போது போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த மோசடி நிறுவனத்தைச் சேர்ந்த 10 முகவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.. இறுதியில் கைதான மொத்தம் 14 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன், நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+