மாணவிக்குப் பாலியல் தொல்லை.. புகாரை மறைத்த சேலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கைது
சேலம்: பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறை, குழந்தைகள் உதவி மையம் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சேலம் ஆத்தூர் பள்ளியில் மாணவிக்கு அதே பள்ளி மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து, அதை மறைத்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கின்றன. வீடு தொடங்கி பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரிக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. முக்கியமாக அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பிறகு கல்வி நிறுவனங்களில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே 14 வயது மதிக்கத்தக்க மாணவி உள்ளார். இவர் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அண்மை காலமாக மாணவி மிகவும் சோகமாக வலம் வந்தார். யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மாணவியின் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர்கள் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து மாணவியின் பெற்றோர், குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.
அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மாணவியின் புகார் அடிப்படையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று மாணவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாலியல் தொந்தரவு குறித்து மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அதை காவல்துறையிடம் தெரிவிக்காமல் மறைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராமன் மற்றும் ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்பிரியா ஆகியோர் மீது ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications