வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்திலிருந்து அரசியலுக்கு புதுவரவு! ஸ்டாலினை வாழ்த்தி விளம்பரம்!
சேலம்: திமுகவின் மூத்த முன்னோடியாக திகழ்ந்து மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி மலர்விழி ராஜா அரசியலில் குதித்திருப்பது சேலம் மாவட்ட திமுகவினரை புருவம் உயர்த்த வைத்துள்ளது.
ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாரிசாக அவரது இளையமகன் டாக்டர் பிரபு இருந்து வரும் நிலையில், புதுவரவாக அரசியல் என்ட்ரி கொடுத்திருக்கிறார் மலர்விழி.
சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு அளிக்கும் தைரியத்திலும், நம்பிக்கையிலும் தான் மலர்விழி ராஜா அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீரபாண்டி ஆறுமுகம்
சேலத்துச் சிங்கம் என வர்ணிக்கப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் திமுகவின் மூத்த முன்னோடியாக திகழ்ந்து மறைந்தவர். இவருக்கு அடுத்தப்படியாக அவரது மகன் வீரபாண்டி ராஜா மாவட்ட பொறுப்பாளராகவும், திமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அண்மையில் வீரபாண்டி ராஜா இளம் வயதிலேயே மறைந்தார். இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்து அரசியல் பிரதிநிதியாக அவரது இளைய மகனும், மருத்துவருமான பிரபு மட்டுமே திமுகவில் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

வீரபாண்டி ராஜா மகள்
இந்தச் சூழலில் மறைந்த வீரபாண்டி ராஜாவின் மகள் மலர்விழி ராஜா அரசியல் என்ட்ரி கொடுத்து சேலம் உடன்பிறப்புகளை புருவம் உயர்த்த வைத்திருக்கிறார். வீரபாண்டி ராஜா மறைந்தது முதல் அவரது ஆதரவாளர்கள் மலர்விழியை அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி வந்தனர். ஏற்கனவே தனது சித்தப்பாக்கள் பிரபு, பாரப்பட்டி சுரேஷ் என கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் நிலையில் தானும் வந்தால் சரியாக இருக்குமா என மலர்விழி யோசித்து வந்திருக்கிறார்.

அரசியல் எண்ட்ரி
இதனிடையே வீரபாண்டி ஆறுமுகம் மீதும் அவரது மகன் வீரபாண்டி ராஜா மீதும் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தனிப்பட்ட பாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் வீரபாண்டி ராஜா மகள் மலர்விழி ராஜாவுக்கு அமைச்சர் நேரு தரப்பில் இருந்து நம்பிக்கையும், தைரியமும் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்தே அவர் அரசியலில் குதித்துள்ளதாக காரணம் கூறப்படுகிறது. மேலும், அரசியலிலும், கட்சியிலும் தனது தந்தை சாதிக்காததை தாம் சாதிக்க வேண்டும் என விரும்புகிறாராம்

ஸ்டாலினுக்கு வாழ்த்து
கடந்த மார்ச் 1 -ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள மாலை நாளிதழ்களிலும் அரைபக்கம் அளவுக்கு முதல்வரை வாழ்த்தி விளம்பரம் கொடுத்து, நான் அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்லு என்கிற வகையில் கட்சியினருக்கு தெரியப்படுத்தியிருந்தார். வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்துள்ள 3-ம் தலைமுறையை சேர்ந்தவர் மலர்விழி என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications