காவிரியாற்றில் சாமியாடிய பெண்கள்.. 10 ஆண்டுக்கு முன் ஆற்றில் வீசிய அம்மன் சிலையை தேடும் மக்கள்
சேலம்: சேலத்தில் இரு பெண்கள் அருள்வாக்கு கூறியதால் 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை 15 நாட்களாக அந்த கிராமத்தினர் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட ஒட்டப்பட்டியில் அம்மன் கோயில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புதுப்பிக்கப்பட்டபோது அங்கிருந்த பழைய அம்மன் சிலையை பூலாம்பட்டியில் உள்ள காவிரியாற்றில் அப்பகுதி மக்கள் வீசிவிட்டனர்.

திருவிழா
இதைத் தொடர்ந்து அவினாசியில் இருந்து புதிய சிலை உருவாக்கப்பட்டு ஒட்டப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் கும்பாபிஷேகமும் நடைபெற்றுவிட்டது. வழக்கம்போல கோயிலில் இந்த ஆண்டு வைகாசி மாத திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.

சிறப்பு பூஜை
அப்போது அந்த பகுதியில் உள்ள பெண்கள் சிலர் சாமியாடி அருள்வாக்கு கூறினர். மேலும் பூலாம்பட்டி காவிரியாற்றில் வீசிய பழைய சிலையை கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்தால் மட்டுமே மழை பெய்யும் என கூறினர்.

சிலை தேடும் பணி
இதையடுத்து மீனவர்கள் உதவியோடு அந்த சிலையை கிராம மக்கள் 15 நாட்களாக தேடி வந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடியிலிருந்து முத்துகுளிக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களது உதவியுடன் சிலை தேடும் பணி நடைபெற்றது.

பரபரப்பு
அப்போது காவிரி ஆற்றிலேயே 2 பெண்கள் சாமியாடி சிலை இருக்கும் இடத்தை காட்டுவதாக கூறினர். மேலும் சாமியாடியபடியே காவிரி ஆற்றுக்கு சென்றனர். இதையடுத்து அவர்களையும் பரிசலில் ஏற்றிக் கொண்டு தேடி பார்த்தும் சிலை கிடைக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications