மன்னிப்பு கேட்க முடியாது.. காஷ்மீர் பிரச்சனை பற்றி பேச போகிறேன்.. மலேசியா மகாதீர் பரபரப்பு கருத்து!
கோலாலம்பூர்: காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐநாவில் பேசியதற்காக எந்த விதமான மன்னிப்பும் கேட்க முடியாது என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்து இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது தொடர்பாக இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஐநாவில் குரல் எழுப்பி இருந்தது. இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் இந்த நாடுகள் நேரடியாக தலையிட்டது.
அதிலும் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை வன்மையாக கண்டித்து இருந்தார். ஐநா சபையில் காஷ்மீர் சிறப்பு அதிகார நீக்கத்திற்கு எதிராக இவர் பேசியது பெரிய அளவில் எதிர்ப்புகளையே சந்தித்தது.

இறக்குமதி
இதனால் மலேசியாவில் இருந்து இந்தியா இந்த வருட தொடக்கத்தில் பால்ம் ஆயில் இறக்குமதியை நிறுத்தியது . இதனால் இந்தியா மலேசியா உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது . மலேசியாவின் பொருட்களை இறக்குமதி செய்வதை மொத்தமாக நிறுத்த இந்தியா யோசனை செய்தது . ஆனால் அதற்குள் மலேசியாவின் பிரதமராக முஹைதீன் யாசீன் தேர்வானார். இதனால் இரண்டு நாட்டு உறவில் கொஞ்சம் தற்போது முன்னேற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது .

என்ன சொன்னார்
இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐநாவில் பேசியதற்காக எந்த விதமான மன்னிப்பும் கேட்க முடியாது என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐநாவில் காஷ்மீர் குறித்து பேசினேன். தற்போது நான் பேசியது எல்லாமே அங்கு உண்மையாகி வருகிறது.

கேட்க முடியாது
என்னுடைய பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. ஆனால் இதனால் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். இந்தியா செய்த அநீதியை எதிர்த்ததற்கு நாங்கள் கொடுத்த விலை இது என்று நினைக்கிறேன். அரசியல் ரீதியான பிரச்சனை வரும் என்று தெரிந்துதான் இப்படி பேசினேன். தைரியமாக என் குரலை வெளிப்படுத்தினேன்.

இனி பேசுவேன்
நான் இப்போது பிரதமர் கிடையாது. இனி நான் வெளியுறவு கொள்கை குறித்து பயப்பட தேவையில்லை . எந்த கவலையும் இன்றி நான் பேச முடியும். இந்தியாவுடன் உறவு பாதிக்கும் என்ற கவலை இன்றி நான் காஷ்மீர் குறித்து பேச முடியும். காஷ்மீரில் லாக்டவுன் போடப்பட்டு ஒரு வருடம் ஆனது குறித்து குலாலம்பூரில் பேச இருக்கிறேன் , என்று மகாதீர் முகமது குறிப்பிட்டுள்ளார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications