தலைக்கேறிய போதை! தொழிலாளியின் காதை கடித்த நபர்! தமிழகத்தை சேர்ந்தவருக்கு சிங்கப்பூரில் சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடிபோதையில் 47 வயது தொழிலாளியின் காதை கடித்து துப்பிய தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளிக்கு சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்தவர் மனோகர் சங்கர். இவர் சிங்கப்பூருக்கு கட்டட வேலைக்கு சென்றார். அங்கு அவரை போல் பணிக்கு சென்ற தொழிலாளர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார்.
இவருடன் 47 வயது நிரம்பிய ஒருவரும் தொழிலாளியாக அங்கு வேலை செய்து வந்தார். மனோகர் சங்கருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி மனோகர் சங்கர் தாங்கள் தங்கியிருந்த கட்டடத்தின் மாடியில் மாடியில் மதுபானம் குடித்தார். அதன்பிறகு போதையில் அவர் 47 வயது தொழிலாளியை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனவருத்தமடைந்த அவர் தன்னை திட்டாமல் இருக்கும்படி மனோகர் சங்கரிடம் தெரிவித்தார். அப்போது தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றவே இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற மனோகர் சங்கர் தனது சக தொழிலாளியான 47 வயது நிரம்பியவரின் காதை கடித்து வைத்தார். ரத்தம் வடிந்த நிலையில் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிச சிகிச்சை அளித்தனர். இதுபற்றி டாக்டர் கூறுகையில், ‛‛தொழிலாளியின் இடது காதுமடலில் 2 செமீ அளவு துண்டாகி உள்ளது. இருப்பினும் அவர் தொடர் சிகிச்சையால் குணமாகி உள்ளார். இருப்பினும் அவரது காது சிதைந்தது சிதைந்தது தான்'' என தெரிவித்தார்.
இதுதொடர்பான வழக்கு சிங்கப்பூரில் நடந்து வந்தது. இந்நிலையில் தான் குற்றம்சாட்டப்பட்ட மனோகர் சங்கருக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மனோகர் சங்கருக்கு 5 மாத சிறை தண்டனையும், 1,000 சிங்கப்பூர் டாலரும் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications