தலைக்கேறிய போதை! தொழிலாளியின் காதை கடித்த நபர்! தமிழகத்தை சேர்ந்தவருக்கு சிங்கப்பூரில் சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடிபோதையில் 47 வயது தொழிலாளியின் காதை கடித்து துப்பிய தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளிக்கு சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்தவர் மனோகர் சங்கர். இவர் சிங்கப்பூருக்கு கட்டட வேலைக்கு சென்றார். அங்கு அவரை போல் பணிக்கு சென்ற தொழிலாளர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார்.
இவருடன் 47 வயது நிரம்பிய ஒருவரும் தொழிலாளியாக அங்கு வேலை செய்து வந்தார். மனோகர் சங்கருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி மனோகர் சங்கர் தாங்கள் தங்கியிருந்த கட்டடத்தின் மாடியில் மாடியில் மதுபானம் குடித்தார். அதன்பிறகு போதையில் அவர் 47 வயது தொழிலாளியை ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனவருத்தமடைந்த அவர் தன்னை திட்டாமல் இருக்கும்படி மனோகர் சங்கரிடம் தெரிவித்தார். அப்போது தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றவே இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற மனோகர் சங்கர் தனது சக தொழிலாளியான 47 வயது நிரம்பியவரின் காதை கடித்து வைத்தார். ரத்தம் வடிந்த நிலையில் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிச சிகிச்சை அளித்தனர். இதுபற்றி டாக்டர் கூறுகையில், ‛‛தொழிலாளியின் இடது காதுமடலில் 2 செமீ அளவு துண்டாகி உள்ளது. இருப்பினும் அவர் தொடர் சிகிச்சையால் குணமாகி உள்ளார். இருப்பினும் அவரது காது சிதைந்தது சிதைந்தது தான்'' என தெரிவித்தார்.
இதுதொடர்பான வழக்கு சிங்கப்பூரில் நடந்து வந்தது. இந்நிலையில் தான் குற்றம்சாட்டப்பட்ட மனோகர் சங்கருக்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மனோகர் சங்கருக்கு 5 மாத சிறை தண்டனையும், 1,000 சிங்கப்பூர் டாலரும் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications