சிங்கப்பூரில் தொழில் தொடங்க ஆசையா? ஆஃபரை அள்ளித்தரும் அரசு! என்ட்ரி பாஸ் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு, வெளிநாட்டு தொழில் முனைவோருக்காக என்ட்ரி பாஸ் என்ற சிறப்புப் பணி விசாவை வழங்குகிறது. இதன் மூலம், அவர்கள் சிங்கப்பூரில் வணிகங்களைத் தொடங்கி நிர்வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதுமையான முயற்சிகளையும், வலுவான முதலீடுகளைக் கொண்ட நிறுவனங்களையும் ஈர்ப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
சிங்கப்பூரில் புதிய நிறுவனத்தை தொடங்கி, அதை நேரடியாக நிர்வகிக்க விரும்பும் வெளிநாட்டு தொழில் முனைவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட மூலதன நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவி பெற, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்க முடியும். இது தவிர, தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், அதாவது புதிய அல்லது காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வருபவர்கள் ஆகியோரும் இந்த என்ட்ரி பாஸ்-க்காக விண்ணப்பிக்கலாம்.

மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற இன்குபேட்டர்கள், அல்லது ஆக்சிலரேட்டர்களின் ஆதரவு பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இது இல்லாமல் சாதாரண வணிகங்களுக்கு இந்த விசா என்ட்ரி பாஸ் வழங்கப்படாது. பொதுவாக இந்த விசா ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மற்றும் வணிக செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விசா புதுப்பிக்கப்படும்.
பாஸ் வைத்திருப்பவர்கள், தங்கள் மனைவி /கணவர் மற்றும் குழந்தைகளை சிங்கப்பூருக்கு அழைத்து வர முடியும். இதற்கான டிபார்ட்மென்ட் பாஸ் வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் சிங்கப்பூரில் வசிக்கவும், படிக்கவும், வேலை செய்யவும் அனுமதி பெறலாம்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் மனிதவள அமைச்சகம் இணையதளம் வழியாக, இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான ஆவணங்கள், வணிக திட்டம், நிதி ஆதாரத்திற்கான சான்றுகள் மற்றும் இன்குபேட்டர்களின் ஆதரவு கடிதங்கள் அவசியம். பாஸ்போர்ட் விவரங்கள், குடியிருப்பு முகவரி, அல்லது வணிக செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனுக்குடன் அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
என்ட்ரி பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்களுக்கு, 'ஸ்டார்ட் அப் எஸ் ஜி 'போன்ற திட்டங்கள் மூலம், சிங்கப்பூர் அரசு பல உதவிகளை செய்கிறது. எனவே சிங்கப்பூரில் புதியதாக தொழில்களை தொடங்க விரும்புவோர், இந்த என்ட்ரி விசாக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications