கோரண்டைன் கிடையாது... 11 நாடுகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்த சிங்கப்பூர்.. லிஸ்டில் இந்தியா இல்லை..!
சிங்கப்பூர்: இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு கோரண்டைன் கிடையாது என அந்நாட்டு பிரதமர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதிய இயல்பு வாழ்க்கைக்கு பொதுமக்கள் ஒத்திசைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், சிங்கப்பூரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார்.

இதனிடையே கோரண்டைன் வைக்கமாட்டோம் எங்கள் நாட்டுக்கு வருகை தரலாம் என சிங்கப்பூர் விரித்த சிவப்பு கம்பளம் விரித்த 11 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இந்தியாவில் இன்னும் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராததும், முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடையாததாலும் லிஸ்டில் இந்தியா பெயர் இடம்பெறவில்லை.
அதேவேளையில், இங்கிலாந்து, அமெரிக்கா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், கனடா என 11 நாடுகளை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வந்தால் தனிமைப் படுத்தப்படமாட்டார்கள். இந்த நடைமுறை வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதேபோல் நவம்பர் 15-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தென் கொரிய பயணிகளும் தாராளமாக சிங்கப்பூருக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. VTL எனப்படும் வேக்சினேடட் டிராவல் லேன் என்ற பெயரில் இதற்காக சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது சிங்கப்பூர் அரசு.
இந்தியா, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு எள்ளளவும் தளர்த்தவில்லை. ஆசிய கண்டத்தில் புருனே நாட்டினருக்கும் மட்டும் கோரண்டைன் ஃபிரீ அனுமதியை சிங்கப்பூர் அரசு அளித்திருக்கிறது.
சின்னஞ்சிறிய எழில் நாடான சிங்கப்பூரில் உலகனின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. சுற்றுலாத்துறை மூலம் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை ஈட்டி வந்த சிங்கப்பூர், கொரோனா கால கட்டுப்பாடுகள் காரணமாக வளர்ச்சிப் பாதையிலிருந்து பின் தங்கியுள்ளது.
இதனால் இனியும் இதில் பொறுமைக்காக்க வேண்டாம் என எண்ணிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்க், கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களை புதிய இயல்பு வாழ்க்கைக்கு தயாராகிக் கொள்ளுமாறு கேட்டுள்ளார். இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து தான் அதிகளவில் சிங்கப்பூருக்கு பயணிகள் வருவர். நூற்றில் 43% பேர் இந்த 3 நாடுகளிலிருந்து தான் 2019-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications