"மேடம்கள்" செய்த காரியத்தை பார்த்தீங்களா.. அதுவும் பஸ் ஸ்டாண்டிலேயே.. கொந்தளித்த பொதுமக்கள்
அரசு பஸ்ஸில் நகை திருடிய 3 பெண்கள் கைதானார்கள்
சிவகங்கை: பட்டப்பகலிலேயே 3 பெண்களும் பொதுமக்களிடம் சிக்கி கொண்டார்கள்.. அதுவும் பஸ் ஸ்டாண்டிலேயே..!
சமீப காலமாக சிவகங்கை மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம், ஒக்கூரில் பூட்டியிருந்த கிளினீக்கை உடைத்து பொருட்களை திருடி சென்றுள்ளனர்.. கிளினீக்கில் இருந்த ஃபேனை கூட கழட்டி கொண்டு போயுள்ளனர்.. இது தொடர்பாக ஒருவர் மட்டும் இப்போதைக்கு கைதாகி இருக்கிறார்.. மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது.

செக்போஸ்ட்
அதேபோல, எஸ்எஸ் கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள செக்போஸ்ட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது அந்த வழியாக வந்த குளத்துப்பட்டியை சேர்ந்த கணேசன் மகன் பாரதிராஜா என்ற 20 வயது இளைஞர் வந்தார்.. அவரிடம் போலீசார் வழக்கமான விசாரணை மேற்கொண்டபோது, அவர் ஒரு சங்கிலி திருடன் என்பது தெரியவந்தது..

உதவி
இவருக்கு கார்த்திக் என்ற நண்பர் இந்த திருட்டுகளுக்கு எல்லாம் உதவி உள்ளார்.. யதேச்சையாக போலீசார் விசாரிக்கும்போது அவர் பாக்கெட்டில் 10 பவுன் நகைகள் இருந்திருக்கிறது.. எங்கேயோ திருடிவிட்டு அந்த வழியாக அப்போது வந்து கொண்டிருந்தபோதுதான் வசமாக சிக்கி உள்ளார்... இதேபோல இன்னொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.. அதில் 3 பெண்கள் சிக்கியிருக்கிறார்கள்..

சாந்தி - மாரி
இளையான்குடி அருகே அம்முகுடி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி வள்ளி... இளையாங்குடி வருவதற்காக பரமக்குடியில் இருந்து தாயமங்கலம் வழி செல்லும் அரசு பஸ்ஸில் வந்திருக்கிறார். செல்வி, சாந்தி, மாரி ஆகிய 3 பேரும், வள்ளியை ஃபாலோ செய்து கொண்டே வந்துள்ளனர்,.. இவர்கள் 3 பேருமே திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்.. இதில், சாந்தியும் மாரியும் அக்கா தங்கைகள் ஆவர்..

திருட்டு
3 பேருமே வள்ளி ஏறிய அதே பஸ்ஸில் ஏறி கொண்டனர்.. இளையாங்குடி பஸ் ஸ்டாண்டில் வள்ளி இறங்க முயன்றார்.. அப்போது 3 பெண்களும், கீழே இறங்குவதுபோல வந்து வள்ளி பக்கத்தில் நின்று கொண்டனர்.. பிறகு திடீரென வள்ளியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை திருட முயற்சித்துள்ளனர். பஸ் படிக்கட்டில் இந்த சம்பவம் நடந்ததால், அந்த பஸ்ஸில் இருந்த கண்டக்டர் இதை பார்த்துவிட்டு கூச்சல் போட்டார்..

கைது
உடனே பஸ் ஸ்டாண்டில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் சேர்ந்து, 3 பெண்களையும் சுற்றி வளைத்தனர்.. இளையாங்குடி போலீஸ் ஸ்டேஷனிலும் ஒப்படைத்தனர்... பட்டப்பகலில், அரசு பஸ்ஸில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... இந்த 3 பெண்களும் எங்கெல்லாம் திருடியிருக்கிறார்கள்? என்பது குறித்த விசாரணையை இளையான்குடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications