அப்பா.. அய்யனாரே.. உன் புள்ளையை கூடவே இருந்து காப்பாத்துப்பா.. சாமியிடம் வேண்டி கொண்ட வடிவேலு!
சிவகங்கை அருகே நடைபெற்ற கோயில் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்
சிவகங்கை: "அய்யனாருக்கு வருஷா வருஷம் திருவிழா நடத்தினாதானே மழையை வரவழைக்க முடியும்.. வர்ற தண்ணியை வீணாக்காமல் இளைஞர்கள் அதை சேமித்து வைக்கணும்" என்று நடிகர் வடிவேலு கோயில் விழாவில் பேசி உள்ளார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நாடகத்தில் நடித்து கொண்டிருந்தவர் வடிவேலு. அப்போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இந்நிலையில் சில வருஷங்களாகவே சினிமாவில் வடிவேலுவை பார்க்க முடியாத நிலை உள்ளது.
தேர்தல் சமயத்தில் வந்து ஓட்டு போட்டார், கூடவே ஒரு டான்ஸையும் போட்டுவிட்டு போய்விட்டார். அதற்கு பிறகு இப்போது திடீரென ஒரு மேடை நாடகத்தில் தோன்றி உள்ளார். இந்த நாடகம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கலியாந்தூர் கிராமத்தில் நடந்தது. இது அவரது மனைவியின் சொந்த ஊர்.

அய்யனார்
இந்த ஊரில் உள்ள அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவில் வடிவேலு குடும்பத்துடன் கலந்து கொண்டார். இப்படி அய்யனாருக்கு விழா எடுத்தால் மழை பெய்யும் என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கை. இந்த விழாவின் ஒரு பகுதியாக வள்ளி திருமணம் நடந்தது.

குத்தாட்டம்
இதனை வடிவேலு தொடங்கி வைத்தார். அப்போது மேடையிலேயே ஒரு குத்தாட்டம் போடவும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பிறகு, ஒரு பாட்டு பாட சொல்லவும். ‘எட்டணா இருந்தால்' பாடலை முழுசுமாக பாடி முடித்தார்.

இளைஞர்கள்
அப்போது பேசிய வடிவேலு, "கலியாந்தூர் சுற்றுவட்டார கிராமங்களின் மருமகன் நான். இப்படி விழாவில கலந்துக்கிறது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? அய்யனாருக்கு அடிக்கடி இப்படி திருவிழா எடுத்து, மழையை வரவழைக்க வேண்டும். இல்லேன்னா இளைஞர்களுக்கு இதெல்லாம் தெரியாமலேயே போய்விடும்.

விழாக்கோலம்
கிராமத்தினுடைய பண்பாடுதான் உலகத்துக்கே உதாரணமா இருக்கு. இப்போ எல்லா இடங்களிலும் தண்ணி பிரச்சனை இருக்கு. அதனால் மழை நீரை வீணாக்காமல் இளைஞர்கள் சேமித்து வைக்க முன் வரவேண்டும்" என்றார். வடிவேலு வருகையையொட்டி கலியாந்தூர் கிராமம் மட்டுமல்லாமல் சுத்துப் பட்டு கிராமங்களும் விழாக் கோலம் பூண்டு அத்தனை பேரும் வடிவேலுவைக் காண ஓடோடி வந்து விட்டனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications