நெருக்கடி கட்டத்தில் கூட 122 மனுக்கள் மீது நடவடிக்கை.. அடடே..கார்த்தி சிதம்பரம்..!
சிவகங்கை: சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கடந்த ஒரு மாதத்தில் 122 கோரிக்கை மனுக்கள் மீது தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட நூலிழையில் தலைமையிடம் இருந்து சீட் பெற்று தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்தி சிதம்பரம். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் தலைமை, சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் நிறுத்தி வைத்தது.

இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக்கொண்டது, சிதம்பரத்தின் மகனுக்கு சீட் இல்லையாம் என ஆளாளுக்கு ஆருடங்கள் கூறத் தொடங்கினர். ஆனால் அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி சிவகங்கை தொகுதியில் சீட்டும் பெற்றும் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறவும் செய்தார் கார்த்தி சிதமபரம்.
இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டு, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தந்தை ப.சிதம்பரத்தை வெளியே கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். கடந்த 10 நாட்கள் உண்மையிலேயே ப.சிதம்பரம் குடும்பத்துக்கு நெருக்கடியாக காலக் கட்டம்தான்.

இந்தச்சூழலிலும், தன்னை வெற்றிபெற வைத்த தொகுதி மக்களின் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றத் தவறவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொகுதி மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 122 மனுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் அதன் விவரத்தை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி வங்கிப் பரிந்துரை வரை கடிதம் அளித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலும், தேக்க நிலையில் உள்ள முன் அனுப்பிய கோரிக்கை கடிதங்கள் மீதும் எம்.பி.கவனம் செலுத்தி வருவதாக கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications