Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேறு ஆட்டோவை திருடி அதில் உள்ள என்ஜினை தன் வண்டியில் பொருத்திய டிரைவர்... சிக்க வைத்த சின்ன விஷயம்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், வேறு ஆட்டோவை திருடி அதில் உள்ள என்ஜின், டயர்களை கழற்றி தன் ஆட்டோவில் பொருத்தி இருக்கிறார். இதை எப்படி கண்டுபிடித்தார்கள். சிக்க வைத்த சின்ன விஷயம் குறித்து பார்ப்போம்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் 53 வயதாகும் அப்பாஸ் என்பவர் தனது ஆட்டோவை சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார். இந்நிலையில சில நாட்களுக்கு முன்பு அப்பாஸின் ஆட்டோ திடீரென காணாமல் போனது. இதுகுறித்து அப்பாஸ் திருப்புவனம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவு மூலம் தீவிரமாக விசாரித்தனர்.

sivagangai driver who stole another auto and removed engine tires and mounted them on his vehicle

இதற்கிடையே திருப்புவனம் பாக்யாநகரில் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கு இடமாக நிற்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. அந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அது அப்பாசுக்கு சொந்தமானது என்பதும், அதில் இருந்த என்ஜின் பழுதாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மெக்கானிக் மூலம் அந்த என்ஜினை போலீசார் சோதித்து பார்த்ததுடன், என்ஜின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அந்த என்ஜின் மானாமதுரையைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 42) என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர். அப்பாசுக்கு சொந்தமான ஆட்டோவில் ஆனந்தனின் முகவரி கொண்ட என்ஜின் வந்தது எப்படி? போலீசார் சந்தேகம் அடைந்து ஆனந்தனை பிடித்து விசாரித்தனர்.

அப்போது தான் ஆட்டோவை திருடி அதில் உள்ள என்ஜின், டயர்களை கழற்றி தன் ஆட்டோவில் பொருத்தியதை ஆனந்தன் ஒப்புக்கொண்டார். ஆனந்த அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், ஆனந்தனின் சொந்த ஊர் மானாமதுரையை அடுத்த மேலப்பசலை கிராமம் அ ஆகும். இவர் அங்கு ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். சமீப நாட்களாக தனது ஆட்டோவின் என்ஜின் அடிக்கடி பழுதாகி தொல்லை கொடுத்து வந்தததாம். ஆட்டோவில் டயர்களும் தேய்ந்துவிட்டதாம். இதனால் ஆட்டோவில் பல உபகரணங்களை மாற்ற வேண்டி இருந்தது. ஆனால் அதற்கு செலவு செய்வதற்கான பணம் அவரிடம் இல்லாமல் இருந்திருக்கிறது.

இதனால் திருப்புவனம் பகுதியில் சாலையோரம் நின்ற ஆட்டோவை யாருக்கும் தெரியாமல் திருடி, அதில் இருந்த என்ஜின் மற்றும் தேவையான உபகரணங்களை கழற்றி எடுத்து தனது ஆட்டோவில் பொருத்திவிட்டு, என்னுடைய ஆட்டோவில் பழுதாகி இருந்த என்ஜின், டயர் மற்றும் சில உபகரணங்களை கழற்றி, திருடி வந்த ஆட்டோவில் பொருத்தி அதேபகுதியில் நிறுத்தி இருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே தனது ஆட்டோவின் என்ஜின் அப்பாஸ் ஆட்டோவில் பொறுத்தியால் வசமாக சிக்கி உள்ளார். இதையடுத்து ஆனந்தனையும், அவருக்கு சொந்தமான ஆட்டோவையும், திருட்டு போன ஆட்டோவையும் திருப்புவனம் போலீசார் பறிமுதல் செய்தனர். திருடிய ஆட்டோ டிரைவர் ஆனந்தனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+