சிவகங்கை கல்குவாரியில் மண் சரிவு! 5 தொழிலாளர்கள் பலி! மேலும் ஒருவர் பத்திரமாக மீட்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கல் குவாரியில் மண் சரிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண் சரிவில் சிக்கிய மேலும் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மேலூர் அருகே மல்லாகோட்டை எனும் கிராமம் உள்ளது. இங்கு மேகவர்மன் என்பவருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு இன்று ஆட்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் 6 பேர் மண் சரிவில் சிக்கினர். தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் வந்து ஒருவரை காப்பாற்றினர். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மற்ற 5 பேர் மண்ணில் புதைந்தனர். சம்பவ குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வந்து மண் சரிவில் சிக்கியவர்களை மீட்ட போது அவர்கள் 5 பேரும் பலியாகிவிட்டனர்.
ஆண்டி சாமி, கணேசன், ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி என மொத்தம் 5 பேர் பலியாகிவிட்டனர். சம்பவ குறித்து கேள்விப்பட்டதுமே அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கல் குவாரியில் ஆய்வு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications